Connect with us
mansoor alikhan

Cinema News

குலாப் ஜாமூன் கொடுத்து மன்சூரை கரெக்ட் பண்ண நினைச்ச நடிகர்!.. கடைசில பல்பு வாங்கினதுதான் மிச்சம்..

Actor Mansoor Alikhan: மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பின் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, பங்காளி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லனாக தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிகாட்டியவர் மன்சூர் அலிகான்.

இவர் விஜயகாந்தின் பரம ரசிகர். அவர் ஒருவருக்கு மட்டுமே இவர் பயப்படக்கூடியவர். விஜயகாந்த் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் கேட்பவர். இவர் மறுமலர்ச்சி எனும் திரைப்படத்தில் நடிக்குபோது படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்துள்ளார். படக்குழுவில் இருந்த அனைவரும் இவருக்கு போன் செய்து அழைத்துள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் இவர் கேட்கவில்லையாம்.

இதையும் வாசிங்க:காத்திருந்து காத்திருந்து!.. 2 நாட்களாக புக் மை ஷோவில் குடியிருக்கும் சென்னை வாசிகள்.. லியோ பரிதாபங்கள்!

பின் என்ன செய்வது என தெரியாமல் படக்குழு விஜயகாந்திடம் கூறியுள்ளனர். விஜயகாந்த்தும் மன்சூருக்கு போன் செய்து படப்பிடிப்புக்கு உடனே செல்லுமாறு கூறியுள்ளார். கேப்டனின் பேச்சை தட்டாத மன்சூர் அலிகான் உடனே படபிடிப்புக்கு சென்றுவிட்டாராம். கேப்டனின் பேச்சை என்றுமே மீறாதவர் மன்சூர் அலிகான்.

நிஜ வாழ்வில் மிகவும் எதார்த்தமான மனிதர் இவர். இவர் சினிமாவில் வில்லனாக தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்தவர். இவர் ஆரம்பத்தில் நடன கலைஞராகவும் இருந்துள்ளார்.. மேலும் இவர் தனது நிஜவாழ்வில் பழகும் அனைவரிடமும் தன்னை ஒரு பெரிய நடிகர் என காட்டிகொள்ளாமல் பழகுபவர்.

இதையும் வாசிங்க:கடைசி நேரத்தில் மாறிய முக்கிய காட்சி!. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தோட ஹலைட்டே அதுதான்!…

இவர் ஒரு முறை கல்லீரல் தொந்தரவால் சிரமப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. போனில் ‘சார் நான் உங்களின் ரசிகன் தினேஷ். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன்.. நான் உங்களை பார்க்க வரலாமா?’ என ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மன்சூர் அலிகான் ‘பார்க்கணும்னா வரவேண்டியது தான.. அத எதுக்கு போன் பண்ணி கேக்குற?’.. என கண்டபடி பேசிவிட்டராம்.

அவர் அப்படி பேசியது அந்த ரசிகருக்கு மனவருத்தம் ஆகிவிட்டதாம். பின் சில நாட்களுக்குபின் மன்சூர் அலிகான் படபிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் வந்த தினேஷ் ‘ சார்!.. ஒரு நாள் நீங்க உடம்பு சரியில்லாதபோது ஒரு கால் வந்துச்சுல்ல..நீங்க கூட கண்டபடி திட்டுனீங்களே’.. என சொல்ல, அதற்கு மன்சூரும் ‘ஆமா திட்டினேன் அதுக்கு என்ன இப்போ?’ என கூறியுள்ளார். அந்த தினேஷ்தான் நான் என கூறியுள்ளார். அந்த தினேஷ் வேறு யாருமல்ல. அட்டகத்தி திரைப்படத்தில் நடித்த தினேஷ்தானாம். அவரைதான் மன்சூர் திட்டியிருக்கிறார்.

பின் மன்சூர் அலிகான் ‘அட்டகத்தி தினேஷ்னு சொன்னா எனக்கு தெரியும் நீ தினேஷ்னுதான சொன்ன என கூறியுள்ளார். பின் தினேஷ் நான் உங்களை பார்க்க குலோப்ஜாமூன் வாங்கி வந்தேன்… ஆனால் நீங்க அப்படி பேசிட்டீங்க.. என கூறியுள்ளார். பின் அவ்வாறு பேசியதற்கு மன்சூரும் வருத்தப்பட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் அந்த விஷயத்துல கொடுத்து வச்சவரு..! பிரபல தயாரிப்பாளரிடம் புலம்பிய சிவாஜி கணேசன்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top