Connect with us
marimuthu

Cinema News

மாரிமுத்துவுக்கு பின்னாடி ஒரு வலியா? இதுவே வேறொருத்தியா இருந்தா போயானு போயிருப்பாங்க!

Actor Marimuthu: நடிகர் மாரிமுத்து – ஒரு சாதாரண உதவி இயக்குனராக இருந்து காலத்தின் கோலம் என்று சொல்வதை போல் அவரே எதிர்பார்க்காமல் நடந்தது நடிகராக மாறியது. சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே ஒரு தனி இடத்தை பிடித்தார் மாரிமுத்து.

கவிஞர் வைரமுத்துவால் தான் மாரிமுத்துவுக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. வாலி, ஆசை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்துவுக்கு மேலும் அடித்தளம் போட்டவர் நடிகர் ராஜ்கிரண். அரண்மனைக் கிளி படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

இதையும் படிங்க: நோயில் தவிக்கும் சமந்தா… கல்யாண மாப்பிள்ளையாகும் நாக சைதன்யா… பிரபல நடிகை கில்லாடி தானுங்கோ!

இப்படி படிப்படியாக வளர்ந்த மாரிமுத்துவுக்கு பின்னாடி இருந்த சோகக்கதையை அவரது தம்பி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். சினிமா மீதுள்ள ஆசையால் சென்னைக்கு வந்த மாரிமுத்து கேகே நகரில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தாராம். அப்போது அவருடன் சில நண்பர்களும் தங்கியிருப்பார்களாம்.

அவர்கள் எல்லாரும் நல்ல வேலையில் வசதியான வீட்டு பசங்களாம். அதனால் மாரிமுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது தண்ணியை முகத்தில் ஊற்றுவது தூங்கவிடாமல் துன்புறுத்துவது என மிகவும் டார்ச்சர் செய்வார்களாம். அதனாலேயே இரவு அவர்கள் எல்லாம் தூங்கிய பிறகுதான் மாரிமுத்து அந்த ஹோட்டலுக்கு வருவாராம்.

இதையும் படிங்க: முதல் பாதி மரண மொக்கை!.. எஸ்.ஜே. சூர்யா இல்லைன்னா சேகரு செத்துருப்பான்.. மார்க் ஆண்டனி எப்படி இருக்கு?

இப்படி பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறாராம் மாரிமுத்து. மேலும் அவருக்கு ஒரு பில்லராக இருந்தது  அவர் மனைவிதான் என்றும் மாரிமுத்துவின் தம்பி கூறினார். ஏனெனில் அவர் வேலையில்லாத போது சினிமாவே கதினு  கிடந்தாலும் வேறு வேலைக்கு போகவேண்டியதுதானே என்று சொல்லாமல் மாரிமுத்துவின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் இந்தளவுக்கு மாரிமுத்து ஜெயித்தார் என்றால் அதற்கு முழுகாரணம் அவர் மனைவிதான் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வசதியான வீட்டிலிருந்து வந்தவராம் மாரிமுத்துவின் மனைவி. ஆனால் அந்த ஒரு பந்தா கெத்து எதையும் மாரிமுத்துவிடம் காட்டமாட்டாராம். மாரிமுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம் கூட நான் இருக்கிறேன் என்று தைரியப்படுத்திக் கொண்டுதான் இருப்பாராம். இதுவே வேறொருத்தியாக இருந்தார் போயானு போயிருப்பார்கள் என்று மாரிமுத்துவின் தம்பி கூறினார்.

மேலும் மாரிமுத்து கொஞ்சம் கோபப்படுவார். எதையும் வெடுக்குத்தனமாக பேசக்கூடியவர். எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்ப்பவர். குளிக்கும் போது கூட செருப்பு அணிந்துதான் குளிப்பாராம். இப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மாரிமுத்துவையும் குடும்பத்தையும் மிக சந்தோஷமான முறையில் வைத்தவர் அவர் மனைவி என்றும் அதன் காரணமாகத்தான் இப்போது கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு அவரது மனைவி பெயரைத்தான் வைக்க வேண்டும் என விரும்பினாராம் மாரிமுத்து.

இதையும் படிங்க: போதாத காலம்! ஒன்னுமில்லாத நேரத்திலும் ஆசை விட்டபாடில்லை – எம்ஜிஆரை தக்க சமயத்தில் மீட்டெடுத்த பிரபலம்

google news
Continue Reading

More in Cinema News

To Top