Connect with us

Cinema News

போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!

Mysskin: தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே அதிகமாக கலாய்க்கப்பட்டவர்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாக மிஷ்கின் இருப்பார். அதுக்கு அவர் பேச்சு எதாவது தான் பெரிய காரணமாக இருக்கும். அப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை தான் மீண்டும் உடைத்து வைரலாகி விட்டார்.

சித்திரம் பேசுதடி படத்தினை இயக்கி கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் மிஷ்கின். படம் விமர்சன ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

இதையும் படிங்க: சிவாஜி பட பாட்டுல இருந்துதான் சுட்டாங்களா?!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டு உருவான விதம் இப்படித்தான்!.

ஆனால் கமர்ஷியல் படமாக இல்லாமல் மிஷ்கினின் கதை வேறு வடிவத்தினை பெற்று இருக்கும். ஆனால் அதையெடுத்து அவரின் வித்தியாச படைப்புகளான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி என எந்த படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறவே இல்லை.

இதையடுத்து விஷால் நடிப்பில் இவர் இயக்கிய துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதையடுத்து விஷாலுடன் நடந்த கருத்து வேறுபாட்டால் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பிரச்னையை சந்தித்தது. இதையடுத்து அப்படத்தில் இருந்து விலகினார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரிடம் அத கேட்டது தப்பா? அடுத்த நாளே படப்பிடிப்பில் இருந்து துரத்தப்பட்ட எஸ்.ஏ.சி

ஆனால் அவருக்கும் எனக்கும் சண்டை ஆகிவிட்டது. இப்போ அவரிடம் போக முடியாது. நானும் சும்மாவே இருந்தால் போர் அடிக்கிது. அதனால் என்ன செய்றதுனு தெரியாம இசையமைக்க போறேன். ஆனால் எனக்கு எப்போதுமே இளையராஜா குருதான் எனக் குறிப்பிட்டார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top