Connect with us

Cinema News

புயல் வேகத்தில் ரஜினிகாந்த்.. இனிமே ஓய்வே கிடையாது.. அடுத்தடுத்து 2 படங்கள் கன்பார்ம்!

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வு பெற போகிறார். இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த படம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க- ரஜினிக்கு குறுக்கே வந்த நடிகர்!. தலைவர் 170 டைட்டிலை கூட சொல்ல முடியலயே!. இது என்னடா சோதனை!…

அடுத்ததாக ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படம் சமூக நீதி கருத்தை பேசும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்த தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என்றும் இந்த படத்தில் பகத் பாசில் தான் வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அமிதாப் பட்சனும் நடிக்கவுள்ளார். இது தான் அவரின் முதல் தமிழ் படமாகும். ஜெயிலர் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த படத்திற்கான அறிவிப்பு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஒரு 3 மாத காலம் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த படத்திற்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஓய்வே இல்லாமல் உடனடியாக அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், அதற்கடுத்ததாக தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சினிமாவிலிருந்து ஓய்வு பெரும் எண்ணத்தில் ரஜினிகாந்த் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- வெறித்தனமாக களமிறங்கும் வேட்டையன்!.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்!.. சும்மா தெறி!…

google news
Continue Reading

More in Cinema News

To Top