Cinema News
நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்! அந்த பொண்ணு தூக்கு மாட்டிக் கொள்ள போயிட்டா! பொன்னம்பலம் அதிர்ச்சி தகவல்
சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் ஏராளமான படங்கள் நடித்து மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்தவர். கபாலி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்.
வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரளவைத்த பொன்னம்பலம் சமீப காலமாக உடல் நிலையில் கோளாறு ஏற்பட்டு இப்போதுதான் தேறி வருகிறார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டு ஒரு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பொருள் உதவி செய்து உதவியவர்களில் சிரஞ்சீவி, தனுஷ், சரத்குமார் ,கமல்ஹாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசியிருக்கிறார் பொன்னம்பலம். பொன்னம்பலம் நேரில் பார்ப்பதைவிட சினிமாவில் பார்க்கும் போது கொஞ்சம் பயங்கரமாகவே இருப்பார் .அதனாலேயே அவருக்கு பெண் கொடுக்க பல பேர் தயங்கினார்களாம். குறிப்பாக எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய முன்வரவில்லையாம்.
ஒரு சமயம் பெண் பார்க்க பொன்னம்பலம் அவருடைய குடும்பத்தார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் இவர் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் நேராக வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொள்ள போய்விட்டாராம். இதில் பயங்கரமான காமெடி என்னவென்றால் பொன்னம்பலம் அந்த வீட்டுக்குள் போய் உட்கார்ந்தும் அந்த நாற்காலியே உடைந்து விட்டதாம்.
பார்ப்பதற்கும் கொஞ்சம் கரடு முரடாகவும் இருந்ததால் அந்தப் பெண்ணிற்கு பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். உடனே பொன்னம்பலம் அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம். இப்போது அவர் திருமணம் செய்திருக்கும் அவருடைய மனைவிக்கும் ஆரம்பத்தில் பொன்னம்பலத்தை பிடிக்காமல் தான் இருந்ததாம். திருமணம் ஆகி கிட்டத்தட்ட ஒரு வாரம் அவருடைய மனைவி பொன்னம்பலத்திடம் பேசாமல் தான் இருந்தாராம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி பொன்னம்பலம் புரிய வைத்தாராம்.
இது ஒரு புறம் இருக்க பொன்னம்பலத்தின் உடல்நிலை திடீரென்று இந்த அளவு மோசம் அடைந்ததற்கு காரணம் அவருடைய உடலில் ஸ்லோ பாய்சன் இருந்ததனால் தான். அது அவருக்கு தெரியாமலேயே அவருடைய சகோதரர் அவர் குடிக்கும் ஆல்கஹாலில் ஸ்லோ பாய்சனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்தாராம்.
இது பொன்னம்பலத்திற்கு தெரியாமலே இருந்ததனால் தான் அவருடைய உடலில் இந்த அளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாம் .ஒரு கட்டத்தில் பொன்னம்பலம் இப்படியே போனால் நாம் எல்லோருக்கும் கஷ்டத்தை தான் கொடுப்போம் என நினைத்து இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அதன் பிறகு என்ன என கண்டறிந்து தனக்கு நெருக்கமானவர்கள் உதவி செய்ததனால் தான் இந்த அளவுக்கு நான் உங்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் பொன்னம்பலம் கூறினார்.
இதையும் படிங்க : ரஜினி – கமல் – அமீர் காம்பினேஷன்!.. மரண மாஸ் ஸ்டோரி!.. அட அது மட்டும் நடந்திருந்தா!..