More
Categories: Biggboss Tamil 7 latest news television

ஊரே ப்ரதீப் பிரச்னைக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. ஆனா அவர் காதலி என்ன சொன்னார் தெரியுமா?

Pradeep Antony: இந்த வாரத்தின் ஹாட் டாப்பிக் என்றால் அது பிக்பாஸில் பிரதீப் ஆண்டனிக்கு விசாரிக்கப்படாமல் கொடுத்த ரெட் கார்ட் தான். அதற்கு கண்டனங்கள் தான் அதிகமாக எழுந்தது. பழைய போட்டியாளர்கள் கூட இந்த தீர்ப்பை விமர்சித்தனர்.

இதையடுத்து தற்போது நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள்கள் ப்ரதீப் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ச்சியாக வெளியாகி அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதை கூட விசாரிக்காமல் கமல் எப்படி தீர்ப்பு கொடுத்தார் எனவும் ரசிகர்கள் அவரையும் வறுத்தெடுக்கின்றனர்.

இதையும் படிங்க: சோறு, சண்டை, காசு!.. ஒரே கதையை வச்சு உருட்டும் சிறகடிக்க ஆசை..! இப்படியே போனா என்ன ஆகுறது..?

அதுவும் இல்லாமல் ரவீனா சொன்ன குற்றச்சாட்டின் போது நானும் உடன் இருந்தேன். அது வெளியில் தெரிவது போல இருந்ததை மறைக்க தான் சொன்னார். இப்படி அவர்கள் சொன்ன எல்லா பழிக்குமே வேறு உண்மை இருப்பதால் ரசிகர்களே அதிர்ச்சி ஆகி விட்டனர். இதனால் ப்ரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் பழி உணர்ச்சி தான் எனக் கூறினார்.

இதையும் படிங்க: பசங்க பிரச்சனை பண்ணாலும் தப்பெல்லாம் பொண்ணுங்க மேலயா?!.. பாக்கியாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா!..

மேலும் ப்ரதீப்பின் காதலி என்னிடம் பேசினார். அவர் வெளியில் வந்ததே நல்லது தான் என்றாராம். இது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக கூறினார் என்று யுகேந்திரன் தெரிவித்தார். இதனால் ப்ரதீப்பை மீண்டும் உள்ளே அழைத்து வர அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே நம்பப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts