Connect with us

latest news

பசங்க பிரச்சனை பண்ணாலும் தப்பெல்லாம் பொண்ணுங்க மேலயா?!.. பாக்கியாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி குழந்தையை தூக்கிக்கொண்டு அழுது கொண்டே ரோட்டில் செல்கிறார். செல்வி ஓடி வந்து நம்ம புருஷன் எல்லாமே தப்பு தான் ஜெனி. வா நான் உன்னை கொண்டு போய் வீட்டில் விடுகிறேன் என்கிறார்.

ஆனால் ஜெனி அக்கா நீங்க என் மேல பாசம் வச்சா போங்க எனச் சொல்லி விடுகிறார். இதையடுத்து அங்கு வரும் ராதிகா, ஜெனியை என்ன என்று விசாரிக்கிறார். அவரை பார்த்து செழியன் தன்னை ஏமாற்றி விட்டதாக அழுகிறார்.

இதையும் படிங்க: இமான் பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டிய சிவகார்த்திகேயன்.. செம போட்டோ!

அவரை சமாதானம் செய்து தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு போய் ஜெனி வீட்டில் விட்டு வருகிறார். பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் ஜெனி வெளியில் போனதற்கு பாக்கியா மீது பழியை போடுகிறார். எங்க கிட்ட சொல்லி இருந்தால் நாங்களே ஜெனி காதுக்கு போகாமல் பார்த்து இருப்போம் என்கின்றனர்.

அப்போது ராதிகா கை தட்டிக்கொண்டே வீட்டுக்குள் வருகிறார். அது எப்படி ஜெனி வீட்டை விட்டு போனதுக்கு பாக்கியா சொல்லாதது தான் காரணமா? எல்லா செஞ்சிட்டு இதோ உங்காந்து இருக்கானே. இவன் மேல எந்த தப்பும் இல்லையா? என்கிறார்.

உடனே ஈஸ்வரி இப்போ நீ ஏன் சப்போர்ட்டுக்கு வர நீயும் மாலினி மாதிரி வந்தல அதான் பேசுறீயா? என்கிறார். நானும் மாலினியும் ஒன்னு இல்லை. ஆனால் செழியனும், உங்க பையனும் ஒன்னு தான் என்கிறார். இதையடுத்து கோபி என்ன ராதிகா இப்படி சொல்ற என்கிறார். 

இதையும் படிங்க: கமல் ட்ரீட் மட்டும்தான் இனிக்குமா? என்னோட ட்ரீட்டையும் பாருங்க – ரஜினி பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஆமா பழசெல்லாம் மறந்துட்டா. பசங்க தப்பு செஞ்சாலும் பொண்ணுங்க மேல தான் பழி போடுவீங்களா என்கிறார். இதையடுத்து கோபியை உள்ளே கூட்டுட்டு போ என்கிறார் ஈஸ்வரி. அவர் போனதும். என்ன சொன்னாலும் தப்பு பாக்கியா மேல தான் என்கிறார் ஈஸ்வரி.

இதையடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரியை அடக்கி உள்ளே அனுப்புகிறார். அமிர்தா, எழில், இனியா பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லுகின்றனர். செழியன் தலை குனிந்து அமர்ந்து இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top