Connect with us
vijay

Cinema News

பெரிய மனச பெரிய இடத்துல மட்டும் காட்டினா போதாது.. விஜய் மீது காண்டான தயாரிப்பாளர்…

விஜய் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனானது இப்படம் என்றாலும் தனது குழந்தை பருவத்திலேயே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகராக இல்லாவிட்டாலும் தனது தந்தையின் முயற்சியினால் இவர் தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொண்டார்.

பின் துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற படங்களில் வெற்றியை எட்டி பிடித்தார். இவர் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் இவர் மிக பெரிய புகழை சம்பாதித்தார். பின் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். என்னதான் இவர் பெரிய அளவில் பெயரை பெற்றாலும் ஓரிரு படங்கள் இவரின் காலை சறுக்கிதான் விட்டன.

இதையும் படிங்க: அப்பாகிட்ட மட்டுமில்ல மகனுடன் கூட விஜய் பேசுவது இல்லையா? இயக்குனர் எண்ட்ரி கூட சொல்லவில்லையாம்!

ஆனால் தற்போது விஜய் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அது பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் முதல் இடத்திலேயே இருக்கின்றன. இவர் நடித்த தெறி, மாஸ்டர், சர்கார் போன்ற திரைப்படங்கள் இவர்தான் மாஸ் ஹீரோ என்று சொல்லும்படி இவருக்கு தனி புகழை பெற்று தந்தன. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சமீபத்தில் அரசியலுக்கு வருவதற்கான ஒரு பாதையை உருவாக்கி கொண்டுள்ளார்.

இவரின் ரசிகர் மன்றம் வழியாக மக்களுக்கு ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். இவர் தற்போது பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் வருகையை இவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது எந்த அளவு உண்மை என்பது படம் வெளியானால்தான் தெரியும்.

இதையும் படிங்க: விஜய் மீது ஓவர் பாசத்தில் சீமான்… ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய தளபதி! அண்ணன இப்டி கேட்டுப்புட்டியேப்பா!

விஜய் பொதுவாக மிகவும் நெருக்கமாக இருப்பது இயக்குனர் அட்லியுடன்தான். இயக்குனர் அட்லி இயக்கத்தில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் அட்லி விஜயைதான் நடிக்க வைக்க  நினைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விஜய்யின் சிபாரிசாலேயே இப்படத்தின் ஷாருக்கான் நடித்ததாக இணையதளத்தில் பேசப்பட்டன. அதைபோலவே ஜெய்லர் திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சனிடம் ரஜினியை பரிந்துரைத்தது விஜய்தானாம்.

விஜய்யின் இச்செயலை சினிமா வட்டாரங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்படியான பெரிய பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சிபாரிசு செய்யாமல் இன்னும் பல அருமையான கதைகளை கையில் வைத்து கொண்டு இருக்கும் சிறு சிறு இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் விஜய் இவ்வாறாக செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் படத்திலேயே வெறுப்பை சம்பாதித்த லைகா.. கோலிவுட்டில் டாப் நிறுவனமாக மாறியது எப்படி?

google news
Continue Reading

More in Cinema News

To Top