Connect with us

Cinema News

புருஷன் கெட்டினு நினைச்சா பக்கா மோசடியா இருக்காரே!.. புலம்பி தள்ளும் சீரியல் நடிகை மகாலட்சுமி!

Ravinder Mahalakshmi: பிரபலங்கள் சிலர் திருமணம் நடக்கும் போது வாவ் சொல்வதும் சில ஜோடியை பார்த்து ஷாக் ஆவதும் வழக்கமாக நடப்பது தான். அப்படி ஒரு ஜோடியாக சமீபத்திய பட்டியலில் இணைந்தவர்கள் தான் ரவீந்தரும், மகாலட்சுமியும். ஆனால் தற்போது இந்த திருமணத்தால் நொந்தது தான் மிச்சம் என புலம்புவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். படங்கள் தந்த புகழை விட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தே பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆனார். அதை தொடர்ச்சியாக ஃபேட்மேன் என்ற யூட்யூப் சேனலையும் தொடங்கி நடத்தி வந்தார்.

இதையும் படிங்க: வாங்குனது 3 கொடுத்தது 1… அவசரப்பட்ட ஐசரி கணேஷ்… அல்வா போல் ஆட்டைய போட்ட சிம்பு..

இவருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு கடந்த வருடம் செப்டம்பரில் திருமணம் ஆனது. அந்த செய்தியை கேட்ட பல இளசுகளுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான். ஒரு ஆண் பிள்ளை இருக்கும் மகாலட்சுமி சில மன வருத்தங்களால் கணவரை பிரிந்தார். தனியாக வசித்து வந்தார்.

அப்போது ரவீந்தர் தயாரித்த படத்தில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நகராட்சி திடக்கழிவுகளை மாற்றும் திட்டத்தினை வைத்து சிலரிடம் காசு வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அவரையே நீ அசிங்கமா பேசுறீயா?… மாரிமுத்தை வெளிய போ எனக் கத்திய ராஜ்கிரண்…

ரவீந்தரின் பேங்க் பேலன்சை பார்த்தே மயங்கி இருக்கிறார். இந்த விஷயத்தால் மகாலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் மிகுந்த அதிருதியில் இருக்கிறார்களாம். பெரிய பணக்காரர் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்தேன்.  ஆனா இவரு பக்கா ஃப்ராடா இருக்காரே.

ஓவரா லவ் பண்ண என்னையே ஏமாத்திட்டாரே என நெருங்கி தோழியிடம் மகாலட்சுமி புலம்பியதாக தகவல்கள் ஷூட்டிங் ஸ்பாட் மூலம் வெளியில் கசிந்துள்ளது. சில நாட்கள் முன்னர் தனது முதல் திருமண நாளுக்கு மகாலட்சுமியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் ரவீந்தர் போட்டு இருந்தார். தற்போது அந்த பதிவும் வைரலாக பரவிவருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top