
ஆர்.சுந்தர்ராஜன், கே.பாக்யராஜ் எல்லோருமே கோவையை சேர்ந்தவர்கள்.. சினிமா ஆசையில் ஒன்றாகவே சென்னைக்கு வந்தவர்கள். இருவருமே சினிமாவில் பெரிய இயக்குனர்களாக முத்திரை பதித்தவர்கள்.. இருவருமே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் ஆர்.சுந்தர்ராஜன் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நானும் பாக்யராஜும் ஒன்னாவே சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினோம்… ஒன்றாகத்தான் தங்கியிருந்தோம்.. அப்போது பாரதிராஜா வந்து கொண்டிருந்தார்.. அவருக்கு உதவி இயக்குனர் தேவைப்படுகிறது என தெரிந்து நான்தான் பாக்யராஜை அவரிடம் அனுப்பி வச்சேன்.. பாக்யராஜுக்கு அப்ப கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும்.. அதனால அந்த வேலைக்கு அவன் சரியா இருப்பான் என்று நினைத்தேன்..
நைட் ஃபுல்லா என் கிட்ட போகலைன்னு சொல்லிட்டு இருந்தவன் அடுத்த நாள் காலையில எந்திரிச்சி அவர்கிட்ட போய் சேர்ந்துட்டான். அதுல எனக்கு வருத்தம்.. திடீர்னு ஒரு நாள் அவன்கிட்ட இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது.. ‘நீ ஊருக்கு கிளம்பி போ.. நான் படம் பண்ணும் போது உன்னை கூப்பிடுறேன்’ என எழுதியிருந்தான்.. அந்த லெட்டரின் நடு பக்கத்துல ‘நன்றி’ என எழுதி அவனுக்கே திருப்பி அனுப்பிட்டேன்..
ஒரு நாள் நானும், அவனும் பட்டினியா பல நாட்கள் நடந்த மவுண்ட் ரோட்ல நான் தனியா நடந்து போயிட்டு இருக்கும்போது பாக்யராஜ் பென்ஸ் காரில் வந்தான். ‘என்னை தேனாம்பேட்டையில் இறக்கி விடு’ன்னு கேட்டேன்.. ஆனா முடியாதுன்னு சொன்னார். எனக்கு கோபம் வந்து பக்கத்துல இருந்த கல்லெடுத்து அடிக்கப்போனேன். பென்ஸ் கார்ல போறது போனது அவனோட வளர்ச்சிதான்.. ஆனால் யாருக்கும் துரோகம் பண்ண கூடாது.. யாரையும் ஏமாத்தக் கூடாது.. அதுதான் எனக்கு பெரிய வருத்தம்’ என்று சொல்லியிருக்கிறார்..