பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தா பிரச்சனை வருமா?.. ஆரம்பத்திலேயே ஏழரையை கூட்டும் பிக் பாஸ் ரச்சிதா!..

சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் என விஜய் டிவி கம்பெனி புராடக்ட்டாக இருந்து வந்த ரச்சிதா எக்ஸ்ட்ரீம் எனும் படத்தில் நடித்துள்ளார். நேற்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ரச்சிதா இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என ரொம்பவே பெருமையாக பேசினார்.

ஆனால், அவரை தொடர்ந்து அயலி வெப்சீரிஸில் நடித்த அபி நக்‌ஷத்ரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவர் பேசும் போது பெண்களுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பதால் என்ன என்ன கெட்டது நடக்கிறது என்பது தான் படத்தின் கதை என உண்மையை உளறிவிட்டார்.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

அயலி படத்தில் பெண்களுக்கு கல்வி வேண்டுமென்றும், ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் பேதம் இருக்கக் கூடாதுன்னு நடிச்ச பொண்ணையே இப்படி இந்த படத்துல மாத்திட்டாங்களே என நினைத்த பத்திரிகையாளர்கள் அங்கேயே இயக்குநரிடம் இதுபற்றிய கேள்விகளை எழுப்ப, நாங்க இந்த படத்துல எல்லா பெண்களையும் தப்பா சொல்லல, பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் அவர்களுக்கே தெரியாமல் நடக்கக் கூடிய அசம்பாவிதங்களில் இருந்து அவர்களை காக்க வேண்டிய அக்கறையுடன் இந்த படத்தை எடுத்திருக்கிறேன் என இயக்குநர் விளக்கம் கொடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரச்சிதாவிடம் கேள்வி எழுப்ப, அய்யோ அதை பத்தி மட்டும் பேசாதீங்க, அதனால் ஒரு வாய்ப்பும் கிடைக்காது என்றும் திறமை இருந்தால் தான் இங்கே சான்ஸ் கிடைக்கும் என பேசியுள்ளார். பெண்களுக்கு எதிரான படத்தில் ரச்சிதா நடிக்கிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

 

Related Articles

Next Story