More
Categories: Cinema History Cinema News latest news

என்னிடம் ரஜினி வாய் விட்டு கேட்டது இது ஒன்னை தான்.. வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

Vairamuthu Rajini: தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு 80ஸ் காலத்தில் நிறைய பாடல்கள் எழுதிய பெருமை வைரமுத்துவாக தான் இருப்பார். அப்படி அவர் ரஜினிக்கு பாட்டு எழுதியில் ஒருமுறை ரஜினியே தனக்கு இது வேண்டாம் என கேட்டாராம்.

கோலிவுட்டில் பல முன்னணி நட்சத்திரங்களின் ஹிட் பாடல் லிஸ்ட்டினை எடுத்தால் அதில் கண்டிப்பாக வைரமுத்துவின் பெயர் இருக்கும். அப்படி அவர் எழுதிய பாடல்கள் அதிகம். அதிலும் நிறைய தமிழ் எழுத்துக்களை தன்னுடைய பாடல்களில் பயன்படுத்துவார்.

இதையும் படிங்க: கடனில் மூழ்கிய சிவாஜி… மகனாக நின்று ரஜினி செய்த காரியம்… என்ன மனுஷன்ப்பா…

அவர் மீது தற்போது சில சர்ச்சைகள் பரவி வந்தாலும் அவரின் வரிகளுக்கு இருக்கும் மவுஸ் என்னவோ குறையாமல் தான் இருக்கிறது. அப்படி அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிறைய பாடல்களை எழுதி இருக்கிறார். ஒருமுறை கூட ரஜினி எதையும் கேட்கவே இல்லையாம்.

அவர் கேரியரிலேயே ஒரே ஒருமுறை ஒன்று கேட்டாராம். அதுகுறித்து சுவாரஸ்ய தகவல்கள் தற்போது லீக்காகி இருக்கிறது. அதிலிருந்து, அண்ணாமலை திரைப்படத்திற்கு கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்னப்பூ குஷ்பூ என எழுதி இருக்கிறார்.

என்ன இது குஷ்பூ பெயர் வருகிறது. சரியாக இருக்குமா என சிலர் அவரிடம் கேட்க அவர் நடிகை பெயரை இணைக்கும் போது அது நல்லா ரீச்சாகும் எனக் கூறி இருக்கிறார். இதையடுத்து ரஜினியிடம் அந்த பாடலை தேவா பாடி காட்டி இருக்கிறார். 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

அவரும் குஷ்பூ பெயர் வருகிறதே ஆச்சரியமாகி விட்டாராம். இதையடுத்து என்னுடைய பெயரும் வருமா என அவர் ஆசையாகி கேட்டு விட்டார். இதை தட்ட முடியாத வைரமுத்து, என்றும் நீ ராஜா நீ ரஜினி என்ற வரிகள் இடம்பெற்றதாம். அதை தவிர ரஜினி தன்னை புகழ்ந்து எழுதுங்கள் எனச் சொல்லியது இல்லையாம்.

Published by
Akhilan

Recent Posts