Connect with us

Cinema History

ஆசையாக கேட்ட ரஜினியை காக்க வைத்த கமலின் ஆஸ்தான எழுத்தாளர்..! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..?

Rajinikanth: ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த சேதி தான். அப்படி இருக்கும் போது இருவருக்கும் எந்தவித போட்டி பொறாமையும் இருக்காதாம். எல்லா நேரத்திலுமே இருவரும் தேவையான உதவியை செய்து இருப்பார்களாம். அப்படி ஒரு விஷயம் தற்போது கசிந்துள்ளது.

தற்போதைய நாடகத்துறையில் அதிகமாக கவரப்பட்டவர் கிரேஷி மோகன். அவர் நாடகங்கள் எல்லாமே காமெடியில் ஏ க்ளாஸாக இருக்கும். அவர் தன்னுடைய சினிமா பயணத்தினை கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படத்தில் இருந்து தொடங்கினார்.

இதையும் படிங்க: ஆத்தாடி… ஒத்த ஆள நின்னு மல்லு கட்டும் அர்ச்சனா… பொண்ணுக்கு பொண்ணு சளைச்சது இல்ல போல…

அதை தொடர்ந்து அவர் வசனம் எழுதிய நிறைய படங்கள் கமல்ஹாசனுக்கு தான். அதில் சதி லீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காம ராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்கள் இன்றுமே ஹிட் லிஸ்ட்டில் முக்கியமானது.

இதனால் கமல் மற்றும் கிரேஸி மோகனுக்கு இடையில் நெருங்கிய நட்பு இருக்குமாம். கமலை தவிர மற்ற நடிகர்கள் படங்களில் பணிபுரிய வேண்டும் என்றால் அதனை கமலிடம் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தாராம்.

இதையும் படிங்க: கும்மி அடிச்சுருவார் போலயே! நீங்க யாரா வேணா இருந்துட்டு போங்க – ‘தக் லைஃப்’ கமல் பற்றி பிரபலம் சொன்ன தகவல்

இந்த விஷயத்தினை கமலிடம் கேட்டு சொல்லவா என்றாராம். ரஜினியும் கோபம் கொள்ளாமல் சரி என்றாராம். அதை தொடர்ந்து கமலிடம் இந்த விஷயத்தினை கொண்டு சென்று இருக்கிறார். அதை கேட்ட கமல் செமையாக செஞ்சிக்கொடுங்கள் என்றாராம். இதனால் தான் அவர்கள் லெஜண்ட் என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் கிரேஸி மோகன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top