Cinema History
பலான விஷயமே பரமசுகம்… பெண் இல்லாமல் தூக்கம் வராது… ரஜினியின் ஓபன் டாக்!
சினிமா பிரபலங்கள் பேசும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது அவர்களின் கேரியரை கூட அசைத்து பார்க்கும். பல வருடம் ஆனால் அது எப்போதும் உயிர்ப்புடனே இருப்பதற்கு ரஜினியின் பழைய பேட்டி சமீபத்திய உதாரணமாகி இருக்கிறது.
பல வருடங்களாக தோல்வி முகத்தினை பார்த்த ரஜினிக்கு மிகப்பெரிய ட்ரிட் படமாகி இருக்கிறது ஜெய்லர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மும்மொழி ஸ்டார்கள் நடித்தது மிகப்பெரிய பக்கபலமாகி இருக்கிறது. இதனால் படத்தின் வசூல் அதிகரித்து இருக்கிறது.
இதையும் படிங்க : சிட்டி 3.0 ஆக மாறிய கார்த்தி! கமெண்ட் கொடுக்கிறது யாருனு தெரியுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை?
இதை தொடர்ந்து தன்னுடைய ஆன்மீக பயணத்துக்கு ப்ரேக் கொடுத்து இருந்த ரஜினி ஜெய்லர் படத்தின் வெற்றியால் குஷியில் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தினை முடித்து விட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். அங்கு அவர் செய்த சில விஷயங்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதை ஜெய்லர் வசூலில் கூட கை வைத்ததாக ஒரு தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் பழைய பேட்டி குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்தரங்கம் குறித்து ரஜினி ஒபனாக பேசி இருக்கிறார். அந்தரங்கம் என்பது பரமசுகமான ஒன்று. அதுதான் ஆனந்தம். அதைவிட பெரிய ஆனந்தம் எதுவும் இல்லை. வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இது தவறான விஷயம் இல்லை. பெண் இல்லாமல் தூங்க முடியாது நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : ஆர்யாவா? சூர்யாவா? இல்ல நம்ம சுள்ளான் தனுஷா? அட செம விஷயமால இருக்கு?
சாவி இதழுக்கு அவர் கொடுத்த பேட்டி தான் என்றும் எந்த வித ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் ஓபனா பேசலாம். அதுக்குனு இப்படியா? ஒருகாலத்தில் ரஜினிகாந்த் ரொம்பவே குறும்பு செய்பவராக இருந்தார். அப்போதைய காலத்தில் அவர் இப்படி பேட்டி கொடுத்து இருக்கலாம். ஆன்மீகத்தில் மாறியவுடன் தான் பேசும் விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு பேசுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.