Connect with us

Cinema News

ரஜினி வீட்டு வாசலில் தினமும் 20 பேர் நிப்பாங்க… அதுக்கு காரணம் என்ன தெரியுமா? உண்மையை உடைத்த பிரபலம்…

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் எதையும் யாருக்குமே கொடுக்க மாட்டார் என்ற எண்ணமே பெரும்பாலும் பலரிடம் இருக்கிறது. ஆனால் அவர் செய்யும் சில விஷயங்களை வெளியில் தெரியவிடாமல் பார்த்து கொள்வதாக சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் செய்யும் உதவிகளை பட்டியலிட்டு கொள்வதை அதிகமாக பார்க்க முடியும். அதை வைரலாக்கி அதில் ஒரு புகழை தேடிவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் இதில் வித்தியாசமானவர். அவர் சொத்து சேர்த்து அளவுக்கு உதவிகளும் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…

இதுகுறித்து நடிகர் அனுமோகம் கூறும்போது, ரஜினிகாந்த் வீட்டு வாசலில் தினமும் 20 பேர் லைன் கட்டி நிற்பார்கள். அவர்கள் அனைவருமே உதவிக்காக தான் அங்கு இருப்பார்கள். திருமணத்துக்காக உதவி கேட்டு வந்தவர்களுக்கு லதா ரஜினிகாந்த் வந்து தாம்பூலத்தட்டு கொடுத்து கேட்கும் உதவிகளை செய்வார்.

இந்த விஷயங்கள் வெளியில் தெரியவிடாமல் பார்த்து கொள்கிறார்கள். வலதுகை கொடுப்பதை இடது கைக்கு காட்டாமல் இருக்கின்றனர். இதனால் ரஜினி எதுவும் செய்யவில்லை எனக் கூறுவதெல்லாம் பொய். அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதை இன்றளவும் வாடிக்கையாக தான் வைத்து இருக்கிறார் என்றார்.

இதையும் படிங்க: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. வடிவேலு – பார்த்திபன் காம்போவில் பட்டையைக் கிளப்பிய படங்கள்!..

நடிகர் லிவிங்ஸ்டன் கூட தன்னுடைய மனைவிக்கு திடீர் உடல்நல  கோளாறு ஏற்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்கு தேவைப்பட்ட பெரிய லகரங்களை உடனே ரஜினிகாந்த் கொடுத்து உதவி இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். சூப்பர்ஸ்டார் உதவிகளை செய்வதை வெளியில் காட்டிக்க விரும்பவில்லை. அவ்வளவுதான். அவர் செய்யாமல் இல்லை என ரஜினி ரசிகர்களும் தற்போது சப்போர்ட் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top