More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

மனைவி, பிள்ளைகளை விட்டு சாமியாராக சென்ற ரஜினிகாந்த்… திரும்பி வர காரணம் இந்த இயக்குனர் தானாம்!…

Rajinikanth: ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக பல கோடி சொத்துக்களை வைத்து இருந்தாலும், அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு அதிகம் ஆக ஒரு கட்டத்தில் மிகப்பெரிய முடிவை எடுத்தாராம். ஆனால் அதில் இருந்து அவர் பின்வாங்க காரணமாக இருந்தது அவரின் குருநாதர் பாலசந்தர் தான் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்த சமயத்தில் திடீரென சாமியாராகப் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தார். எக்கசக்கமான பணம், அதிகமான புகழ், மனைவி, பெண் குழந்தைகள் என எல்லாம் இருந்தும் மனதில் ஒரு வெறுமை இருந்ததாம். அதனால், எல்லாவற்றையும் துறந்து சென்றுவிடலாம் என நினைக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?

அந்த நேரத்தில், ரஜினி பாலச்சந்தரின் கவிதாலயாவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். அதற்காக சில தொகையை அட்வான்ஸாக வாங்கியிருந்தார். அதைத் திரும்பக் கொடுத்து விட வேண்டுமென்று முதலில் தன்னுடைய குருநாதர் பாலசந்தரை சந்திக்க சென்றாராம்.

அவரிடம் “நான் சாமியாரா போகப் போறேன் சார். இனிமேல் நடிக்க மாட்டேன். நீங்க எனக்குக் கொடுத்த அட்வான்ஸ் இந்தாங்க” எனக் கொடுத்தாராம். அவரை ஏற இறங்க பார்த்த பாலசந்தர், “ சாமியாரா தானே போகணும். சரிப்போ என்றாராம். அப்போ இந்தப் பணத்தினை வாங்கிக்கோங்க என ரஜினி மீண்டும் நீட்டுகிறார். 

அதற்கு பாலசந்தர், ’உன்னை பத்தி எனக்கு தெரியும். உன் மனசில் தோணுனது யார் தடுத்தாலும் நீ செய்யத்தான் போற. அதனால் நீ சாமியாரா போ. ஆனால் என் பணத்தினை வச்சிக்கோ. என்னைக்காவது உனக்கு நடிக்க ஆசை வரும் அப்போ திரும்பிவா என்றாராம். அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த் தன் மனம் போன போக்கில் எங்கெல்லாமோ சென்றாராம். குடும்பத்தினை மொத்தமாக துறந்தார். 

இதையும் படிங்க: ஐயா உங்ககிட்ட நாங்க கேட்டது ஒரே ஒரு ‘க்’ தான? .. ட்ரோலுக்கு உள்ளான விஜய் கட்சியின் வைரல் போஸ்டர்…

இரண்டே மாதங்கள் முடிந்திருக்க மீண்டும் பாலசந்தருக்கு கால் செய்து நடிக்கிறேன் எனக் கூறுகிறார். ஆனால் ரஜினிக்கு இன்னும் அந்த சாமியார் ஆசை இருந்ததாகவே பாலசந்தருக்கு தோன்றியதாம். அதனால் “நீ நடிக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாட்கள் சுற்றிவிட்டு என்றாராம். அதுக்கு பின்னரும் நடிக்கும் ஆசை இருந்தால் வா என்றாராம்.

மீண்டும் சிறிது நாள் மனம் போன போக்கில் அலைந்திருக்கிறார் ரஜினிகாந்த். அதன் பின்னரே கோலிவுட்டுக்கு திரும்பி நடிக்க தொடங்கினாராம். ஒருகட்டத்தில் ஆன்மீகத்தில் இருந்த பற்றால் மனைவியை விவகாரத்து செய்ய முடிவெடுத்தவர். பின்னர் ரசிகர்கள் செய்த பிரச்னையால் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts