Connect with us
nalini

Cinema News

ராமராஜன் கொடுத்த லவ் லெட்டர்! பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி.. என்ன எழுதியிருக்கார் தெரியுமா

Ramarajan Nalini: தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிகர் நடிகை ஜோடியாக நடித்த விட்டால் உடனே காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றிருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் எத்தனையோ திரையுலக ஜோடிகள் இன்னும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பாக்கியராஜ்-  பூர்ணிமா, சூர்யா- ஜோதிகா, அஜித் – ஷாலினி என பல நட்சத்திர ஜோடிகள் இன்று வரை தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எம்ஜிஆர் தலைமையில் திருமணம் நடந்து இரு குழந்தைகளையும் பெற்று அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ராமராஜன் – நளினி ஜோடியை பற்றி பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவர்கள் திருமணமே ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் நடந்தது. நளினி வீட்டில் இருந்து ராமராஜனை அடிக்க சென்ற சம்பவம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

இதையும் படிங்க: வேகமா போய் குத்தி நிறுத்துய்யா!.. காரை வைத்து கவுண்டமணியை வஞ்சம் தீர்த்த வடிவேலு!..

அதன் பிறகு எம்ஜிஆர் தலையிட்டு இவர்கள் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோஷமாக தங்கள் குடும்ப வாழ்க்கையை கொண்டு சென்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவை எல்லாம் நமக்கு தெரிந்த கதைதான்.

பிரிவுக்கு பிறகும் ராமராஜன் பேசுகிறாரோ இல்லையோ நளினி பல பேட்டிகளில் ராமராஜனை பற்றி இன்றுவரை மிகப் பெருமையாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார். அப்படி நளினி பேட்டிகளை பார்க்கும் பொழுது இந்த அளவுக்கு இன்னமும் ராமராஜன் மீது மரியாதை வைத்திருக்கும் இவர் ஏன் ராமராஜனை விட்டு பிரிந்து வந்தார் என்ற ஒரு கேள்விதான் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: குஷ்பூ வீட்டில் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம்! அட இந்த நடிகரா? அப்போ பிரபு?

இந்த நிலையில் சமீபத்தில் நளினி கொடுத்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராமராஜன் நளினிக்காக கொடுத்த லவ் லெட்டரை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறாராம் நளினி. அதில் ராமராஜன்  ‘என்ன செய்கிறாய்? ஷூட்டிங் எப்பொழுது? இன்று சாப்பிட்டாயா? ’இப்படித்தான் லவ் லெட்டரில் எழுதி இருப்பாராம்.

இதைப் பற்றி நளினியின் மகள் கூறும் போது என் அப்பா முதன் முதலில் என் அம்மாவை சாப்பிட்டியா என்று கேட்டு தான் இம்ப்ரஸ் செய்திருக்கிறார் என கூறினார். ஏனெனில் நளினி அந்த நேரத்தில் படு பிஸியாக இருந்த நடிகை. அந்த நேரத்தில் நளினியை சாப்பிட சொல்வதற்கு யாரும் கூட இருக்க மாட்டார்களாம். அப்போது என் அப்பா ஒருவர் மட்டுமே என் அம்மாவை பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்டாராம். அந்த ஒரு வார்த்தையினால் தான் என் அம்மா அப்பாவின் மீது காதல் வயப்பட்டு அவரை காதலிக்க தொடங்கினார் என நளினியின் மகள் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top