Connect with us
raveena

Biggboss Tamil 7

எல்லாம் தூங்குன பிறகும் நைட் அங்க என்ன வேலை? ரவீனாவை பொளந்து கட்டிய ஆண்டி – சும்மா இருப்பாரா மணி

BiggBoss: இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் விசிட் அடித்துக் கொண்டு வருகிறார்கள்.

உள்ளே வந்ததும் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை சூசகமாகவும் வெளிப்படையாகவும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ரவீனாவின் வீட்டிலிருந்து அவருடைய சகோதரனும் நண்பரின் அம்மாவும்தான் வந்தார்கள்.

ஆனால் ரவீனாவின் அம்மா வரவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் ஆண்டி மணியிடம் முகத்தை கொடுத்தே பேசவில்லை. இது மணிக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. அதன் பிறகு ரவீனாவை லெஃப்ட் ரைட் வாங்கி விட்டு அதன் பிறகு மணியிடமும் கொஞ்சம் பேசினார்.

இதையும் படிங்க: குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!

ரவீனா ஆரம்பத்தில் இருந்த மாதிரி இல்லை. உங்களையே சுற்றிக் கொண்டு இருக்கிறார். அது நீங்கள் கொடுத்த ஸ்பேஸ். ரவீனா வேறு யாரிடம் சென்று பேசினாலும் நீங்கள் அதை தடுக்கிறீர்கள். என்னை அடைய வேண்டுமென்றால் உன் அம்மாவை நீ சரி செய்தால் போதும் என்று நீங்கள் சொல்வது மிகப் பெரிய தவறு என்றெல்லாம் வெளுத்து வாங்கிவிட்டார் உள்ளே வந்த அந்த ஆண்டி.

அதுமட்டுமில்லாமல் எல்லாரும் தூங்கிய பிறகு உங்கள் இரண்டு பேருக்கும் என்ன வேலை. நைட் முழுவதும் பேசிக் கொண்டிருக்க என்ன காரணம். இது இங்கு தேவையில்லாதது. ரவீனாவை பார்த்துக் கொள்ள என்னிடம் தான் அவர் அம்மா சொன்னார் என மணி உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் பல முறை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!

அதையும் ரவீனாவின் ஆண்டி எச்சரிக்கை செய்தார். ரவீனாவை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். நீங்க வேண்டாம் பாஸ் என கூறினார். இவ்வளவு சொல்லியும் மணி அடங்கவே இல்லை. ரவீனாவை குண்டு பையா குண்டுபையா என்றுதான் மணி அடிக்கடி கூப்பிடுவார்.

இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம் என்றும் அந்த ஆண்டி சொல்லிவிட்டு சென்றார். இதை ரவீனா மணியிடம் சொல்ல அதற்கு மணி ‘ஓ அப்படி சொன்னாங்களா? சரி ஒகே . குண்டுபையா குண்டு பையா குண்டுபையா’ என  மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். இதற்கு ரவீனா  ‘என்ன அவங்கள கடுப்பேத்துறீங்களா?’ எனக் கேட்டார்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்!.. காரணம் அந்த பிரபலம்தான்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top