Connect with us

Cinema News

பிரபாஸுக்கு வேட்டு வைத்த பாலிவுட் பாட்ஷா!.. இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு எச்சரிக்கிறாரா?

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் இந்தியில் சாஹோ மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த இரு படங்களும் பெரிய தோல்வி அடைந்த நிலையில், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தை அதிக தியேட்டர்கள் நார்த்தில் வாங்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்தியில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் ஈட்டியிருந்தது. அந்த படம் 1000 கோடி வசூல் ஈட்ட பாலிவுட்டில் பிரசாந்த் நீல் படத்தை ரசிகர்கள் பலர் விரும்பிப் பார்த்தது தான் காரணம்.

இதையும் படிங்க: ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..

ஆனால், இந்த ஆண்டு நிலைமை அப்படி இல்லை. ஜனவரி மாதம் பதான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு 1000 கோடி வசூலையும் அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஒரு 1100 கோடி வசூலையும் ஷாருக்கான் கொடுத்த நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகி உள்ள டன்கி திரைப்படத்துக்குத் தான் முறைப்படி முதல் உரிமை கொடுக்கப்படும் என பாலிவுட் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன.

பிரபாஸின் சலார் படத்துக்கு மிகவும் குறைவான தியேட்டர்கள் நார்த் சைடில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் தனது கட்டுப்பாட்டில் ஷாருக்கான் வைத்துள்ள நிலையில் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் சலார் படத்துக்கு சரி சமமான போட்டியை விட பெரியளவில் பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கானே முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உன்னை வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ!.. பால்கோவா மாதிரி பளிச்சென இருக்கும் நாகினி நடிகை!..

தென்னிந்தியாவில் பிரபாஸ் படத்துக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என தெரிகிறது. இந்த கிறிஸ்துமஸ் போட்டி களைகட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top