More
Categories: Cinema News latest news

வேணானு போனாலும் விடமாட்றீங்களே!.. குஷி பட விழாவில் திடீரென தோன்றிய நாகு – கதறி அழுத சமந்தா

தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஒரு சிறந்த நடிகைதான் சமந்தா. ஆரம்பத்தில் துணை நடிகையாக வந்தவர் அதன் பிறகு ரசிகர்கள் மனதில் அச்சாணி போட்டு அமர்ந்து கொண்டார்.

சொல்லப்போனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு இரண்டாவது நாயகியாத்தான் வருவார் சமந்தா. அதே தெலுங்கு படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். தமிழ் ரசிகர்களிடம் எந்தளவும் வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு வரவேற்பு தெலுங்கு ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க : அட்லீக்கு தொடர்ந்து ஹெல்ப் செய்யும் தளபதி… கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலுமா? ஓவரு சார்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்போது சமந்தாதான் ஒரு கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடம் தங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து  குஷி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் மியூசிக் கான்செர்ட் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஜய்தேவரகொண்டாவும் சமந்தாவும் இணைந்து  கலந்து கொண்டனர். நடனமும் ஆடினார்கள்.

இதையும் படிங்க : கேப்டனை தவிர யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாத ஆளு! சீண்டி விட்டுட்டாங்கப்பா

ஆனால் திடீரென சமந்தா அழ ஆரம்பித்துவிட்டார். ஏனெனில் அந்த விழாவில் ஒலித்த ஒரு பாடல்தான். 2019 ஆம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து நடித்த மஜ்லி என்ற படத்தில் இருந்து ஒரு டூயட் பாடலை பாடகி ஒருவர் பாடிக் கொண்டிருக்க சமந்தா அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அமர்ந்திருந்தார்.

கூலிங் க்ளாஸ் அணிந்திருந்ததால் அவர் கண்களில் நீர் வருவது தெரியவில்லை. எப்போதுதான் இந்தப் பாடலை பாடி முடிப்பீர்கள் என்றளவுக்கு அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published by
Rohini

Recent Posts