Connect with us

Cinema News

மீண்டும் மருதநாயகமா?! இருந்தாலும் கமலுக்கு தைரியம் அதிகம் தான்.!

தற்போது, மருதநாயகம் கதையை மீண்டும் உயிர் கொடுக்க உள்ளாரா.? ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது மல்ஹாசனுக்கு.

தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்தி தான் சம்பாதித்த பணத்தையும் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து இந்திய சினிமாவுக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் எழுத்திலும் இயக்கத்திலும் கைதேர்ந்தவர், அவர் படைப்புகள் ஒவ்வொன்றும் தரமானதாகவும் பேச கூடியதாகவும் இருக்கும்.

அப்படி அவர் தான் நினைத்த கனவு படமாக தொடங்கிய திரைப்படம் தான் மருதநாயகம். இந்த திரைப்படத்தை இங்கிலாந்து ராணி தொடங்கிவைத்தார். இது தொடங்கப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அப்போதே இந்த படத்துக்கு சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவ்வளவு பெரிய பட்ஜெட் முதலீடு செய்ய யாரும் தயாராக இல்லை.

ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் அதே பேச்சு எழும் மருத நாயகம் மீண்டும் உயிர் பெறுகிறது என்று. ஆனால், அதை அப்படியே தயாரிப்பாளர் கிடைக்காமல் அடங்கிவிடும். தனது கனவு படத்தை எப்போதாவது எடுத்து விட மாட்டோமா என்று கமல்ஹாசனும் தீவிர முயற்சி செய்து வருகிறார். தற்போது அதற்கு ஒரு கிரீன் சிக்னல் தற்போது கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். அந்த படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கள்ளது. இதனால், சோனி நிறுவனத்திற்கும் கமல்ஹாசனுக்கும் இணைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- சிம்புவை மரியாதை குறைவாக பேசிய இயக்குனர்.! கொந்தளித்த ரசிகர்கள்.!

இதனை சாதகமாக்கிக் கொண்டு மீண்டும் மருதநாயகத்தை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். ஆதலால், மருதநாயகத்தின் படம் குறித்த தகவல் மொத்தத்தையும் சோனி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளாராம்.

அதனை அவர்கள் பார்த்து விட்டு ஓகே என்றான் அவர்கள் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்குவார்கள். அப்படி ஒருநாள் கமலின் கனவு படமான மருதநாயகம் மீண்டும் உயிர் பெறும்.  அதில், கமல் ஹாசன் நடிக்கிறாரா அல்லது கமல்ஹாசன் மற்ற வேலைகளை கவனித்து வேறு நடிகரை யாரேனும் நடிக்க உள்ளனரா என்பது சோனி நிறுவனத்தின் கையில் தான் தற்போது உள்ளது.

cropped-kamal_haasan_bigg_boss_tamil_5_details-1-1.jpg

google news
Continue Reading

More in Cinema News

To Top