More
Categories: Cinema News latest news

அரசியல் தலைவரின் பயோபிக்கில் நடிக்கும் சரத்குமார்! ரெண்டு பேருக்குமே செட் ஆகாதே!..

தமிழ் சினிமாவில் ஒரு எவர்கிரீன் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள்  அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.90களில் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருந்தவர் சரத்குமார்.

நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். இடையிலேயே அரசியல் என தன் கவனத்தை திருப்பி அரசியல் பக்கம் போனார். அதன் காரணமாகவே அவரின் ஹீரோ என்ற அந்தஸ்து முடிவடைந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க : துணியே இல்லனா கூட இப்படி இருக்காது… ராஷ்மிகா காட்டியது ரொம்ப டூமச்சு… ஆஹான்!

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் காலெடி வைத்த சரத்குமார் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் எந்தளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்ததோ ஒரு கம்பேக்கிற்கு பிறகு தெலுங்கிலும் ஒரு செல்வாக்கு மிக்க நடிகராக வலம் வந்தார்.

வாரிசு படம் அவருக்கு நீண்ட நாள்கள் கழித்து தமிழில் கிடைத்த அரிய வாய்ப்பாக அமைந்தது. அதன் பிறகு போர்த்தொழில் என்ற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமாரை மீண்டும் வரவேற்க  தொடங்கினார்கள். அந்தளவுக்கு அந்தப் படத்தில் சரத்குமாரின் நடிப்பு பெருமையாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஒரு முக்கியமான அரசியல் தலைவரின் பயோபிக்கில் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்தப் பயோபிக்கை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறதாம். பிரபல ப.ம.க கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றில் தான் சரத்குமார் நடிக்க இருக்கிறாராம்.

இதையும் படிங்க : ஹார்ட்டு வீக்கு!.. இவ்ளோ அழக தாங்காது செல்லம்!.. கேப்ரியல்லாவின் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்…

ஆரம்பக் கால அரசியலில் இருவரும் ஒருவரையொருவர் தூற்றி அரசியல் வசனங்களை அள்ளி வீசியவர்கள். இந்த நிலையில் அன்புமணியின் வாழ்க்கை வரலாற்றில் எப்படி சரத்குமார் வந்தார் என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனாலும் அரசியல் வேறு, தொழில் வேறு. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இருபெரும் குறிப்பிடத்தக்க ஜாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இன்னும் இந்தப் படத்தை கவனமாக எடுக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி இந்த பயோபிக்கை எடுக்க போவது இயக்குனர் சேரன் தானாம். அதற்கான வேலைகளில் தான் சேரன் இறங்கியிருக்கிறாராம். சேரன் சரத்குமாருக்கு நல்ல நண்பர் ஆதலால் இதில் நடிக்க எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் சரத் ஒப்புக் கொண்டார் என்றே சொல்கிறார்கள்.

Published by
Rohini

Recent Posts