அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.

தமிழ் சினிமாவில் வில்லனாக தோன்றி, கதாநாயகனாக அடுத்த ரவுண்டு வந்து, இன்று குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் சத்யராஜ். ரஜினி, கமலுடன் பேர் சொல்லும் படங்கள். அஜீத், விஜய்க்கு இணையான வேஷங்கள், இப்படி எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி பண்ணக்கூடிய கதாபாத்திரங்களிலும் தெறிக்க விட்டவர் இவர்.

“மிஸ்டர் பாரத்” ரஜினியுடன் இவர் நடித்த படம் செம ஹிட்டானது. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்குற மோதல்தான் படமே. மோதுறது தன்னோட மகன் கூடத்தான்னு கிளைமாக்ஸ் காட்சி வரைக்கும் தெரியாமலே இருப்பாரு சத்யராஜ். பையனா ரஜினி ஸ்டைலயும், நடிப்பிலேயும் கலக்கிருப்பாரு. இந்த படத்தில் இடம் பெற்ற ‘என்னம்மா கண்ணு செளக்கியமா’ பாடல் இன்றும் ஃபேமஸ்.

கமல் கூட “விக்ரம்”, கொள்ளைக்கூட்ட தலைவன். இந்த படத்துல இவர் பேசின “தகடு”, “தகடு” அப்படீங்கிற வசனம் பம்பரம் மாதிரி சுத்தி, சுத்தி வந்துச்சு தமிழ்நாடு ஃபுல்லா அந்த நேரத்துல. வெறி கொண்ட வில்லனா நடிச்ச இவரு அன்பான ஆக்ரோஷமான, அமைதியான ஹீரோவாவும் நடிச்சிருக்காரு. பல படங்களில் நக்கல் கலந்த நடிப்பு இவரோட “ஸ்பெஸாலிட்டி”.

sat

அஜீத் கூட ‘பகைவன்’ங்குற படம். ஆரம்பத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரமா தெரிஞ்சாலும் படம் நகர, நகர இவரோட அந்த ரோல் எவ்வளவு முக்கியத்துவமானதுன்னு ரசிகர்களை சொல்ல வைத்திருக்கும். சத்யராஜ்கிட்ட அடி வாங்குற மாதிரி கதாப்பாத்திரம் நம்ம “தல” க்கு. அப்போ இவரை விட சத்யராஜ் தமிழ் சினிமாவில பெரிய நடிகரா வலம் வந்தாரு ஹீரோக்கள்ல.

விஜய் கூட ‘நண்பன்’ வித்தியாசமான தோற்றத்துல வசி செஞ்சிருப்பாரு.. இவருக்கு கொடுத்த ‘விருமாண்டி சந்தானம்’ கேரக்டர்ல. படம் முழுக்க ஒரே ‘கலாய்’ தான் . இப்படி நடிப்பில தனக்குன ஒரு ஃபார்முல வச்சிட்டு வரும் சத்யராஜ் சினிமா கேரியர்ல முக்கியமான படம் அப்டீன்னு பார்த்த அது ‘நூறாவது நாள்”.

நல்ல “வழு வழு” ன்னு ஒரு மொட்டையை படம் ஃபுல்லா போட்டுக்கிட்டு , கருப்பு கூலிங்கிளாசையும் மாட்டிக்கிட்டு இவர் காட்டிய வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்கள்லாம் தியேட்டர்ல பயந்து போனாங்களாம். மோகன், நளினி கூட முக்கிய கதாப்பாதிரத்தில நடிச்சிருப்பாங்க. இந்த படத்துல. கூடவே நம்ம மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் கூட ரொம்ப, ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர்ல நடிச்சிருந்தார்.

இந்த படத்தை பற்றி ஒரு மேடையில பேசசிய விஜயகாந்த் ‘என்னதான் நான், மோகன்லாம் நடிச்சிருந்தாலும் எங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி தான் இவரோட நடிப்பு இருந்துச்சி’ன்னு ஒபனா சொல்லியிருந்தாரு. இவரு வருகிற சீன்ல எங்களுக்கு கிடைத்த கைத்தட்டலை விட இவருக்கு தான் அதிகம்னு தன்னடக்கத்தோட சொல்லி இருப்பாரு விஜயகாந்த். நான் இவரோட கெட்டப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல பார்க்கும் போதே அசந்து போய்ட்டேன்னு வேற சொன்னார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago