More
Categories: Cinema News latest news

நீ வா என்கிட்ட பத்திரமா பாத்துக்கிறேன்.! சிம்புவை பப்ளிக்கா அழைத்த சீரியல் நடிகை..,

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக நடிக்கும் நல்ல நடிகைகளுக்கு கூட இணையத்தில் அவ்வளவு ஃபேன்ஸ் இருப்பார்களா என்று தெரியாது. ஆனால், சீரியல் நடிகைகள், டிவி செய்தி வாசிப்பாளர்கள், குறும்பட நடிகைகள் முக்கியமாக இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு இங்கு ரசிகர்கள் ஏராளம்.

Advertising
Advertising

இவர்கள் எது கூறினாலும், இணையத்தில் வைராகி விடுகிறது. அப்படிதான். அண்மையில் ஒரு சீரியல் நடிகை, நடிகர் சிம்புவை காதலிப்பதாக கூறி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, சீரியல் நடிகை ஸ்ரீநிதி தான்.

ஸ்ரீநிதி, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி தொடரில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர், யாரடி நீ மோகினி, புது புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவை பற்றிய பதிவை ஒன்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்களேன் – விஜய் இன்னோர் அஜித்தாக மாறிவிட்டார்.! விக்ரம் ஆடியோ விழாவில் கற்றுக்கொண்ட சிறப்பான பாடம்..,

அதில் , சிம்பு நீங்களும் சிங்கிள் நானும் சிங்கிள் , உன்னையும் பிளே பாய்னு கூப்பிட்றாங்க , என்னையும் பிளே கேர்ள்னு சொல்றாங்க. உண்மையா லவ் பண்ணா அப்டித்தான் சொல்வாங்க. நீ வேணும்னா என்கிட்ட வந்திரு நா பத்திரமா பாத்துக்கிறேன் என பதிவிட்டு அதிர வைத்துவிட்டார். மேலும், சிம்புவை கரெக்ட் பண்ண வாய்ப்புகள் இருக்கு. எனவும் பதவியிட்டுள்ளார்.

Published by
Manikandan

Recent Posts