Connect with us

Cinema News

எவன் பிரச்னை பண்ணாலும் முத்துக்கிட்டையே தான் பிரச்னை வருது… டைரக்டர் சாரே உங்களுக்கே போர் அடிக்கலையா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா எப்படி அடிப்பட்டுச்சு உண்மையை சொல்லு என்று சத்யாவிடம் கேட்கிறார். சத்யா ஆமாக்கா நான் விழுந்து அடிப்படலை. சிட்டிகிட்ட வேலை செய்றேன். அவன் முன்ன மாதிரி இல்ல. இப்போ நேர்மையா இருக்கான். கணக்கு வழக்கெல்லாம் நான் தான் கம்ப்யூட்டர்ல என்ட்ரி பண்ணி தரேன்.

அவனிடம் மாமாவோட பிரண்ட் செல்வம் கடன் வாங்கி இருந்தாரு. ரொம்ப நாளா காசு கொடுக்கலை. அதுக்கு வட்டி வாங்க போகும்போது மாமா தான் என்னை புடிச்சு கையை உடைத்து விட்டார். நான் எவ்வளவு கத்தி கெஞ்சியும் விடலை. அப்போ அவர் மேல குடிச்சி இருந்த ஸ்மெல் வந்ததாக பொய் கூற மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

சீதா திருந்தவே மாட்டாரா? அவர் எல்லாம் என்ன மனுஷன் என்று சொல்கிறார். மீனாவின் அம்மா என் பிள்ளையா தானே அவரை நினைச்சேன். இதனால் கோபமாகும் மீனா கிளம்பி ஷெட்டுக்கு வருகிறார். செல்வம் முத்து இல்லை என்கிறார். நீங்க கூட என்கிட்ட பொய் சொல்லிட்டீங்கள எனக் கேட்கிறார். அப்போ முத்து வெளியில் வர இங்க தான் இருக்கீங்களா?

எதுக்கு என் தம்பியை கையை உடைச்சீங்க எனக் கத்தி கொண்டு இருக்கிறார். செல்வம் உண்மையை சொல்ல வர முத்து தடுத்து நிறுத்தி விடுகிறார். மீனா நான் என் புருஷன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். இடையில் வராதீங்க என்கிறார். முத்துவும் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏன் வர செல்வம் என அனுப்பி விடுகிறார்.

நேராக வீட்டுக்கு வரும் மீனா மொத்த விஷயத்தினையும் அண்ணாமலையிடம் போட்டு உடைக்கிறார். முத்து வீட்டுக்கு வர அண்ணாமலை ஏன் இப்படி பண்ண எனக் கேட்க அவன் பண்ண வேலைக்கு என உண்மையை சொல்ல முடியாமல் தடுக்கிறார். வீட்டில் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

அண்ணாமலை நான் கேட்கலாம் தானே. நீ செஞ்சது தப்பு. சத்யாகிட்ட மன்னிப்பு கேளு என்கிறார். ஆனால் முத்து நான் எந்த தப்பும் செய்யலை. யாரு செஞ்சாலும் பிரச்னை என்மேல தான் விழுது அப்படியே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அடுத்து மீனாவிடம் வரும் முத்து எதுக்கு அப்பாகிட்ட விஷயத்தை சொன்ன எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா என்கிட்ட பேச வேண்டியதுதானே எனக் கேட்கிறார். யார் கிட்டயாவது சொல்லி அழ வேண்டும் அல்லவா என்கிறார். அதுக்கு அப்பா கிட்ட சொல்லுவியா என முத்து கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டரே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top