More
Categories: latest news television

பாட்டி மீது கோபமான முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்னைக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லங்கோ!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் இருந்து விஜயாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். இருக்கும் எல்லாருக்கும் டோஸ் விட்டுக்கொண்டே இருக்க அண்ணாமலை வருகிறார். அவரை பார்த்து எப்படிப்பா இருக்க என கவலையாக கேட்கிறார். பின்னர் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ரவி வர எனக்கு தெரியாம கல்யாணம் செஞ்சிக்கிட்டல எனத் திட்டுகிறார். அதே மாதிரி ரோகினிக்கும், மனோஜுக்கும் கூட திட்டு விழுகிறது. இதையடுத்து பாட்டியை பார்த்து சந்தோஷமாக வந்த முத்துவை பாட்டி அறை விடுகிறார். என்ன பாட்டி எனக் கேட்க நடந்தத ஏன்டா என்கிட்ட சொல்லலை என்கிறார்.

இதையும் படிங்க: செருப்பை தூக்கி வீசி எறிந்த ரசிகர்கள்! அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு நேர்ந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ

இதில் மீனாவுக்கும் தான் என் மேல பாசம் என அவர் கூற முத்துவுக்கு புரிந்து விடுகிறது. இதையடுத்து ஸ்ருதி வந்து பாட்டியுடன் வாயாடிக்கொண்டு இருக்கிறார். மீனாவை ரூமுக்கு அழைத்து சென்ற முத்து ஏன் சொன்ன கடுப்பாகக் கேட்கிறார். நான் சொல்லலைனா பாட்டி பொண்ணு பார்த்துட்டு வந்து அசிங்கப்பட்டு இருப்பாங்க என்கிறார்.

பின்னர் ஹாலில் உட்கார்ந்து பாட்டி மற்றவர்களுக்கு ஸ்வீட்டும், ஸ்ருதிக்கு புடவையும் தருகிறார். ரவி எனக்கு எனக் கேட்க வா என அழைத்து அவருக்கு ஒரு அறை விடுகிறார். விஜயா நீ என்ன பார்க்கிற உனக்கு எதுவும் இல்லை என பல்ப் கொடுக்கிறார். என் பையனை ஒழுங்கா பார்த்து இருந்தா உனக்கு பட்டு புடவையே வாங்கி வந்து இருப்பேன். ரூமில் பாட்டி அடித்து பேசமாட்டேன் எனக் கூறியதால் முத்துவும் கோபத்துடன் அமர்ந்து இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: மேல ஏறாதீங்க! போலீஸ் சொன்னதையும் மீறி தடுப்பை தாண்டி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ‘கைதி’ பட நடிகர்

Published by
Akhilan

Recent Posts