Connect with us

latest news

அண்ணாமலையை கைது செய்த போலீசார்..! நைசாக எஸ்கேப்பான ஸ்ருதி-ரவி ஜோடி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ஸ்ருதி மற்றும் ரவியை பிடித்து திட்டுகிறார். இதை மாமாவிடமாவது சொல்லிருக்கலாமே என திட்டிவிட்டு முத்துவிற்கு கால் செய்கிறேன் என்கிறார். ரவி எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க என காலில் விழுகிறார்.

மீனாவுக்கு தெரிந்த ஐயர் வந்து என்னம்மா பிரச்னை எனக் கேட்கிறார். இந்த கல்யாணம் வீட்டுக்கு தெரியாம நடந்துச்சு. என்கிட்ட சொல்லிருக்கலாமே என்கிறார். எனக்கே தெரியாதுமா. தெரிஞ்சா சொல்லிருப்பேன்ல என்கிறார். தொடர்ந்து ஐயர் மாப்பிள்ளைக்கு சாட்சி கையெழுத்து கேட்கிறார்.

இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

அவர் மீனா நீ ஆசீர்வாதம் பண்ணா நல்லா இருப்பாங்க என அவர் கூறியதை கேட்டு கையெழுத்து போடுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வந்து நீங்களே பேசுங்க. மாமாக்கிட்ட மன்னிப்பு கேளுங்க எனக் கூறி விட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். ஆனால் ஸ்ருதி நம்ம இப்போ வீட்டுக்கு போன எங்க அப்பா, அம்மா வந்து என்னை கூப்பிட்டு போயிடுவாங்க எனக் கூறி நம்ம ஃப்ரண்ட் கெஸ்ட் அவுஸுக்கு போய் விடலாம் எனக் கூறி விட்டு சென்று விடுகிறார்.

இதையடுத்து கிப்ட் வாங்க சென்ற பிஜூ கோயிலுக்கு வருகிறார். அங்கு யாரும் இல்லாமல் போக ஸ்ருதியை தேடி வீட்டுக்கே வருகிறார். அவர் அம்மா டப்பிங் ஸ்டுடியோ போய் இருப்பா எனக் கூறுகிறார். சொல்லாம போறது என்ன பழக்கம். எனக்கு இதெல்லாம் பிடிக்கலை எனக் கூறி விட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: அல்ட்ரா லெவலில் நாடகம் போட்டீங்களே கோபி…! ராதிகா கிட்ட காசு இல்லனு கூட சொல்லிருக்கலாமே..!

இதனால் கடுப்பான ஸ்ருதியின் பெற்றோர் அண்ணாமலை வீட்டுக்கு வந்து சத்தம் போடுகின்றனர். எங்க மகளை கடத்திட்டீங்க என சரமாரியாக கேள்வி கேட்க அவர் ரவி ஹோட்டலுக்கு தான் போய் இருப்பதாக கூறுகிறார். போன் செய்ய ரவியின் மொபைலை வாங்க ஆஃப் செய்து விடுகிறார் ஸ்ருதி.

இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சியாகின்றனர். தொடர்ந்து போலீசார் வீட்டுக்கு வந்து அண்ணாமலையிடம் விசாரிக்க காவல் நிலையம் வர வேண்டும் எனக் கூறுகின்றனர். விஜயா, மனோஜ், ரோகிணி வயசானவங்களை கூட்டி போக கூடாது என மறுப்பு சொல்கின்றனர். நீங்க வரலைனா அரெஸ்ட் வாரண்ட் வாங்கி கைது செய்து கூட்டிட்டு போகுற மாதிரி இருக்கும் எனக் கூற அண்ணாமலை வரேன் எனக் கூறி கிளம்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top