நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!...

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரவி நைட்டியுடன் சென்று ஸ்ருதிக்கு டீ போட்டு கொண்டு இருக்கிறார். அப்போ ரோகிணி வர அவர் மறைந்துக் கொள்கிறார். பின்னர் விஜயா பசிக்குதுனு எழுந்து கிச்சனுக்கு செல்கிறார். கிச்சனுக்குள் யாரோ இருப்பதை பார்த்து திருடன் எனக் கத்தி விடுகிறார்.

மனோஜ் உள்ளே போய் பார்க்க நைட்டி போட்ட திருடி என்கிறார். அடுத்து உள்ளே செல்லும் முத்து, ரவியை பிடித்து தூக்கி வந்து விடுகிறார். யாரு நீ இவ்வளோ தாடி வளர்த்து இருக்க என முகம் மூடி இருப்பதை பார்த்து விஜயா கேட்கிறார். துணியை பிடிங்கினால் அது ரவி என தெரிந்து எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரவி என்னடா கோலம் என விஜயா திட்டுகிறார். அப்போ அங்கு வரும் ஸ்ருதி நான் தான் போட சொன்னேன் என்கிறார்.

இதையும் படிங்க: தனுஷுடன் பழகிய பின் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டு பெருசா போகுதே!..

எதுக்கு எனக் கேட்க அவன் டிரஸை நான் போட்டு இருக்கேன். அதான் எனக் கூறிவிடுகிறார். இதெல்லாம் உங்க ரூமில் வச்சிக்கோங்க. நல்லா இல்லை எனச் சொல்லி அண்ணாமலை மற்றும் விஜயா உள்ளே சென்று விடுகின்றனர். காலையில் மீனா வீட்டு வேலை செய்து கொண்டு இருக்க இங்கையே இருந்தா பூ பிசினஸ் என்ன ஆகும் எனக் கடுப்படிக்கிறார் முத்து. அப்போ வரும் விஜயா வீட்டில் உள்ள வேலையை முடிச்சிட்டு தான் வேலைக்கு போகணும் என்று கண்டிஷன் போடுகிறார்.

இதற்கு முத்து இதே கண்டிஷனை மத்தவங்களுக்கும் போட வேண்டியதுதானே என்று திட்டுகிறார். உடனே விஜயா மனோஜுக்கு தான் எதுவும் செய்ய மாட்டனு சொல்லிட்ட. ரோகிணிக்கு பிடிச்சதை செஞ்சிடு என்கிறார். ஏன் பார்லர் அம்மாக்கு பிடிச்சதை தான் எல்லாரும் சாப்பிடணுமா எனக் கோபமடைகிறார். மனோஜ், ரோகிணி புதுசா பிசினஸ் ஆரம்பிக்கப் போறாங்க. சாப்பிட நேரம் இருக்காது. இருக்க நேரத்திலையாது சரியா சாப்பிடணும் என்கிறார். அப்போ மனோஜ் மற்றும் ரோகிணி அங்கு வர உனக்கு பிடிச்சதை சொல்லு என்கிறார் ரோகிணி.

உடனே வெஜிட்டபிள் பிரியாணி வேணும் எனக் கேட்கிறார். அதுக்கான காய் இல்ல என மீனா கூற விஜயா வாங்கிக்க மாட்டியா என்கிறார். அதைக்கூட மீனா தான் வாங்கணுமா என அண்ணாமலை கேட்கிறார். உடனே முத்து என்ன காய் வேணும் சொல்லு எனக் கேட்க நீங்க வாங்க போறீங்களா என்கிறார். பார்லர் அம்மா கேட்டதுக்கு அவங்க புருஷன் தான் போகணும். பிசினஸ் தொடங்க போறவன். இதையெல்லாம் கத்துக்கணும் என்கிறார்.

இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு நெத்தியடி!.. சுசித்ராவுக்கு மட்டும் சுத்தி வளைக்கிறாரே திரிஷா?..ஏன்மா இப்படி!..

அண்ணாமலைக்கும் அது தான் சரியென சொல்லி மனோஜை அனுப்புகிறார். வெயிலா இருக்கு எனக் கூறி காரில் சென்று காயை வாங்கி வந்து கொடுக்கிறார். வெறும் நாலு காய் 490 ரூபாயா என எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ் பின்னால் வரும் கடைக்காரர் மெஷினில் ஒரு பிரச்னை. 190க்கு பதில் 490 காட்டுவதாக சொல்லி மீதி காசை கொடுத்து விட்டு செல்கிறார்.

இவனெல்லாம் எப்படி பிசினஸ் செய்ய போறான் என முத்து கலாய்க்க மீனா சிரிக்கிறார். இதனால் ரோகிணி அவமானப்பட்டு இருக்கிறார். அப்போ நாளைக்கு நிறைய சமைக்கணும் என அண்ணாமலை கூற ஏன் நாளைக்கு என்ன என முத்து கேட்க ரோகிணி நக்கலாக பார்க்கிறார். இந்த ஓடுகாலி காசை எடுத்துக்கிட்டு ஓடுன நாளா எனக் கேட்க வேற எதுவும் நடக்கலையா எனக் கேட்கிறார் அண்ணாமலை.

இதனால் மீனா கடுப்பில் ரூமுக்கு செல்ல அண்ணாமலை நாளைக்கு உன் கல்யாண நாள் போய் மீனாவை சமாதானப்படுத்து என அனுப்பி வைக்கிறார். எனக்கு அந்த ஓடுகாலி காசை தூக்கிட்டு போனது தான் நியாபகம் இருக்கு. முறையா நிச்சயம் பண்ணி தேதி குறிச்சு நம்ம கல்யாணம் நடந்து இருந்தா நியாபகம் இருக்கும் என முத்து கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: கமலுடன் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி!. ஷங்கர் சொன்ன பதில்!… இப்ப வரைக்கும் நடக்கலயே!…

 

Related Articles

Next Story