Connect with us

latest news

சிறகடிக்க ஆசை: எக்கசக்க கேடி வேலை பார்த்து திருமணம் செய்த ரவி-ஸ்ருதி..! மீனா இனி காலி தான்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரெண்ட் செல்லும் போது மீனா தன்னை கோயிலில் விட்டுவிடுமாறு கூறுகிறார். அதையடுத்து விஜயா தடுக்க அண்ணாமலை சப்போர்ட் செய்கிறார். இதையடுத்து மீனாவை கூப்பிட்டு கொண்டு கோயிலுக்கு செல்கிறார் ரவி.

கோயிலில் சீதா மாலை கட்டிக்கொண்டு இருக்க பிஜூவுடன் காரில் வந்து இறங்குகிறார் ஸ்ருதி. தொடர்ந்து நீங்க தான் நல்ல டேஸ்ட் வச்சிருக்கீங்க. ஒரு கிப்ட் வாங்கிட்டு வாங்க என அனுப்புகிறார். பிஜூவும் அருகில் இருக்கும் மாலுக்கு சென்று வருவதாக கூறி சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்‌ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..

ஸ்ருதி சீதாவை அழைத்து கொண்டு கோயிலுக்குள் செல்கிறார். கோயிலில் வந்திறங்கும் ரவி நான் போய் ஸ்ருதியை சமாதானம் செய்து விட்டு உங்களை அழைப்பதாக சொல்லி உள்ளே செல்கிறார். இந்த நேரத்தில் காரில் சென்று கொண்டு இருக்கும் முத்துவிற்கு எதிராக பூனை செல்கிறது.

சகுனமே சரியில்லை என அவரும் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே காரை ஓட்டி வருகிறார். அந்த நேரத்தில் ரவி எதையும் போட்டு குழப்பிக்காத. இது நம்ம லைஃபில் ரொம்ப முக்கியமான நாள். சந்தோஷமா மட்டும் தான் இருக்கணும் எனக் கூறுகிறார் ஸ்ருதி. தொடர்ந்து இருவருக்கும் திருமணம் முடிந்து விடுகிறது.

இதையும் படிங்க: இலவு காத்த கிளி போல காத்துக்கிடந்ததுதான் மிச்சம்! ‘அந்தகன்’ படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

ரொம்ப நேரம் ஆகியும் ரவி வராமல் போக உள்ளே சென்று பார்க்கும் மீனா அதிர்ச்சியாகி விடுகிறார். இப்படியா கல்யாணம் செஞ்சிப்பீங்க. வீட்டுக்கு தெரிந்தா என்ன ஆகும் என சத்தம் போடுகிறார். பின்னர் சீதாவிடம் இதுக்கெல்லாம் நீ தான் காரணமா என கன்னத்தில் அறைந்து விடுகிறார்.

இதையடுத்து நாளை வெளியாக இருக்கும் காட்சிகளில் ஸ்ருதி-ரவி திருமணத்துக்கு மீனா தான் சாட்சி கையெழுத்து போடுகிறார். இதனால் இனி சீரியல் நிறைய மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்து என்ன செய்ய போகிறார். விஜயா மீனாவை தான் குற்றவாளி ஆக்குவார் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

google news
Continue Reading

More in latest news

To Top