Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: மீனா வாழ்க்கைக்கு சூனியம் வச்சிட்டியேமா.. கல்யாணத்துக்கு ஆள் பார்த்த ரவி..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்க்கில் பேசி கொண்டு இருக்கும் அண்ணாமலையும், ஸ்ருதி அப்பாவும் காரசாரமாக விவாதித்து கொண்டு இருக்கின்றனர். ஸ்ருதியின் அப்பாவோ அண்ணாமலையிடம் நீங்க பெண்ணை பெற்றால் என் வலி உங்களுக்கு தெரியும் என்கிறார்.

ஆனால் அண்ணாமலையோ பெண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி எல்லா குழந்தைகளுக்கும் பெத்தவங்க முக்கியம் தான். ஒரே மாதிரியாக தானே பாசம் காட்டுகிறோம். இனி உங்க பொண்ணு கிட்ட என் பையன் பேசமாட்டான் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி பெத்த புள்ள இப்படி நிக்குதே!.. ஓவர் டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் ஜான்வி கபூர்!..

வீட்டிற்கு வந்தவர் சோகமாக ரவியை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை யோசித்து கொண்டு இருப்பதை பார்த்த முத்து என்னாச்சுப்பா இப்படி சோகமாய் இருக்க என்று விசாரிக்கிறார். அதற்கு ஸ்ருதியின் அப்பாவை சந்தித்ததையும் அவர் கூறியதையும் முத்துவிடம் சொல்லுகிறார்.

விஷயத்தினை கேட்ட முத்து ஏற்கனவே எனக்கு இது தெரியும். அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு தான் இருக்காங்க. நான் அவனை கண்டிச்சேன் அப்பா. உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவானு என்று தான் உன் கிட்ட சொல்லல. ரவி அந்த பொண்ணு கூட பேச மாட்டான் என்கிறார்.

இதை தொடர்ந்து முத்து மீனாவிடம் ரவி குறித்து கோபப்படுகிறார். ரவி இவ்வளவு சொல்லியும் அந்த பொண்ணு கூட பேசிக்கிட்டு இருந்திருக்கான். இதற்கு ஒரு முடிவு கட்ட, சீக்கிரமா ஒரு பொண்ண பார்த்து அவனுக்கு கல்யாணத்தை முடிக்கணும் என்கிறார். மீனா முத்துவின் கோபத்தினை அடக்க ரொம்பவே முயற்சி செய்கிறார். ஆனால் அவர் சொன்ன எதையையுமே முத்து கேட்கவில்லை.

அதை தொடர்ந்து சீதாவுக்கு கால் செய்த ரவி நாளைக்கு உன்னை பார்த்து வாழ்க்கையை பற்றி பேசணும் என்கிறார். காலையில் பார்க்குக்கு வா எனக் கூறுகிறார். குழப்பத்துடன் ரவியை காண வருகிறார் சீதா. அப்போ வழியில் தோழி கொடுக்கும் அவர் திருமண பத்திரிக்கையை வாங்கி கொண்டு பார்க் வருகிறார். முதலில் பொதுவாக காதல் திருமணத்தினை பற்றி பேசுகிறார் ரவி.

இதையும் படிங்க: ஆசையா கேட்ட சிவாஜி.. அதிர்ச்சியான ரஜினி.. ஆனா செஞ்சாரு பாருங்க அதான் சூப்பர்ஸ்டார்!..

பின்னர் திருமணத்துக்கு உதவி செய்வதாக சம்மதம் தெரிவிக்கிறார். ஸ்ருதியை காண சீதா வீட்டுக்கு செல்கிறார். என் பள்ளி தோழி எனக் கூற சொல்லி ஸ்ருதியும் வர சொல்கிறார். அதைப்போல சீதாவும் வீட்டுக்கு வந்து சொல்ல ஸ்ருதியை அவர் பெற்றோர் கூப்பிடுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top