கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..

விஜயகாந்த் மற்றவர்களுக்கு எப்படி உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். கஷ்டப்படுபவர்களை பார்த்தால் உடனே அவர்களிடம் அதுபற்றி விசாரித்து அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதுதான் விஜயகாந்தின் பழக்கம். அதற்கு காரணம் தன் முன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என நினைப்பவர்.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஒரு மாதிரியான சாப்பாடை போட சொல்லி அதற்கான செலவை தனது சம்பளத்தில் பிடித்து கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் சொன்ன ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. அதனால்தான் விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது என திரையுலகில் எல்லோரும் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட கதையில் மகனுடன் நடிக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட நடக்காம போச்சே!…
திரையுலகில் விஜயகாந்த் போல உதவி செய்பவரை பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் வாரி வாரி வழங்கிய வள்ளல் அவர். வள்ளல் என்கிற பட்டம் எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்துக்குதான் கிடைத்தது. அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் சென்றார்கள்.
பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவுபவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். இப்போது அந்த பெயர் விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ பாலாவுக்கு கிடைத்திருக்கிறது. சாதாரண மனிதர்களுக்கு அவர் செய்து வரும் உதவிகள் எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
பொதுவாக சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவிதம் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், பாலாவோ சம்பாதிப்பது எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மலை கிராமங்களுக்கு 3 ஆம்புலன்ஸ் வண்டிகளை வாங்கி கொடுத்தார்.
இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..
உடல் ஊனமுற்ற சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரின் அம்மாவுக்கு ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தார். இப்போது நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்கள்.
இந்நிலையில், விஜயகாந்துடன் நெருங்கிய பழகியவரும், அவரை வைத்து மரியாதை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த டி.சிவா ஒரு சினிமா விழாவில் பேசிய போது ‘பாலாதான் கேப்டனின் வாரிசு’ என பேசினார். அதோடு, விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.