ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!
May 16, 2024, 17:25 IST
Suchitra: நடிகை சுசித்ரா தொடர்ச்சியாக பிரபலங்கள் குறித்து அதிர்ச்சிகரமான அளவில் பேட்டி கொடுத்து வரும் நிலையில், பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு இதுகுறித்து முக்கிய விஷயங்களை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார். நடிகை திரிஷா, தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத், கார்த்திக் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து சில சர்ச்சையான வகையில் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார். இது சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: தன்னுடைய நரி வேலையை காட்டிய கோபி… அப்போ நீங்க இன்னமும் திருந்தலையா? இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறுகையில், பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சுச்சிலீக்ஸ் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில் பாதிக்கப்பட்ட எந்த நடிகர்களும் பெரிய அளவில் பிரச்சினை சந்திக்கவில்லை. ஆனால் பாடகி சுசித்ரா தன்னுடைய கணவரை விவகாரத்து செய்தார். அவர் கணவர் கார்த்திக் குமாரும் சுசித்ராவுக்கு மனநல கோளாறு ஏற்பட்ட இருப்பதாக ஓபனாகவே பேட்டி கொடுத்திருந்தார். இந்த நாள் இப்போது பேசும் சுசித்ராவின் பேட்டிகளில் அவர் மன வலியை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக நடிகர்கள் தனுஷ், விஷால், அனிருத், கிரிஷ், சங்கீதா, திரிஷா, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்து சுசித்ரா வரிசையாக பேசி வருகிறார். இதையும் படிங்க: விஷால் இழுத்துட்டு ஓடுன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடம் இருக்கும் 200 வைர நெக்லஸ்… பகீர் கிளப்பும் சுசித்ரா…
இந்த பிரச்சனைகளை குறித்து சுசித்ரா தொடர்ச்சியாக பேசி வருவதை பார்க்கும் போது அவர் தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் குமாருடன் மிகப்பெரிய அளவில் தொல்லைகளை சந்தித்து இருக்கிறார். அவருடன் இருந்த மனக்கசப்பையே தற்போது பேட்டிகளில் கொட்டி வருவதையும் பார்க்க முடிகிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை எந்த பிரபலங்களும் அவர் மீது வழக்கு தொடரவில்லை. ஏன் நடிகைகள் பொதுவெளியில் கூட கண்டனங்களை ஓபன் ஆக இன்னும் பதிவு செய்யாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் அதை இப்போது சுசித்ரா வெளியிடுவதற்கு காரணம் என்ன என்பதுதான் மர்மமாகவே இருக்கிறது.
