சூர்யாவும், சிவகார்த்திகேயனும் ஒன்னு தான்… ஆனா அவரு இடத்தினை பிடிக்க முடியாது… பொரிந்து தள்ளிய பிரபலம்…

Published on: March 26, 2024
---Advertisement---

Surya: நடிகர்கள் தளபதி இடத்தினை பிடிக்க கோலிவுட்டில் போட்டி உருவாகி இருக்கும் நிலையில் அதை பிடிக்க இதை செய்தால் போதாது. அவர்கள் இப்படி உழைக்க வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியன் சொல்லி இருப்பது வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருப்பவர் விஜய். கோலிவுட்டில் யாருக்கும் இல்லாத அளவு பெரிய தொகையில் சம்பளம் வாங்குபவர். கிட்டத்தட்ட உச்சத்தில் இருந்த விஜய் கடந்த மாதங்களில் தடாலடியாக அரசியல் கட்சியை அறிவித்தார். உத்திரவாதம் கொடுத்த படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுப்படுவேன் எனவும் தெரிவித்து இருப்பார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. ஆனால் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் உட்பட விஜய் சினிமாவில் இருந்து விலகுவது விற்பனையில் பெரிய நஷ்டத்தினை கொடுக்கும் என வருத்தத்தில் இருக்கின்றனர். கடந்த வருடம் மட்டுமே வாரிசு, லியோ என இரு படங்களை கொடுத்திருப்பார்.

கோலிவுட்டின் வருமானத்தில் அதிக பங்கு விஜயிற்கு தான். தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகினால் பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் என்ற பேச்சுக்களும் இருக்கிறது. அதே வேளையில், விஜயின் இடத்தினை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போடுவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..

விஜயை போல சிவகார்த்திகேயன் சமீபத்தில் ரசிகர் மன்ற கூட்டத்தினை கூட்டி தன்னுடைய கெத்தை காட்டி இருப்பார். இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், கார்த்தி எல்லாருமே ஒன்னுத்தான்  இதுல யாருக்குமே ஸ்பெஷல் இடம் எல்லாம் இல்லை.

ரசிகர் கூட்டம் வைப்பது எல்லாம் விஷயமே இல்லை. அப்படி வைப்பது அவர்கள் கெத்தை காட்டாது. தளபதி இடத்தினையோ ரஜினி இடத்தினையோ பிடித்து விட முடியாது. நல்ல படங்களை கொடுத்தாலே உங்களால்  கோலிவுட்டில் ஒரு இடத்தினை பிடிக்க முடியும். மற்ற விஷயத்தினை செய்தெல்லாம் ஒரு இடத்தினை பிடிக்க நினைப்பது முட்டாள்த்தனம் எனவும் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: இரவு, பகலாக நடித்து 10 நாளில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம்!.. அசால்ட் செய்த எம்.ஜி.ஆர்!..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.