More
Categories: Cinema News latest news

நீங்க பொறுமையா வேலை பாருங்க…கடுப்பாகி பாலாவை கழட்டிவிட்ட சூர்யா.. வணங்கான் கதி?…

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Advertising
Advertising

நடிகர் சூர்யா – இயக்குனர் பாலா கூட்டணிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் தான் வணங்கான்.சூர்யாவின் பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், டைட்டிலுடன் வெளியிடபட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.

 

இப்போதைக்கு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் கன்யாகுமரியில் நடந்து முடிந்தது. இந்த படத்தின் முதல் செட்யூலை முடித்த சூர்யா தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று தனது விடுமுறையை சந்தோசமாக கொண்டாடி விட்டு அண்மையில் சென்னை திரும்பினார்.

இதையும் படிங்களேன் – நீண்ட வருடத்திற்கு பின் இறங்கி ஆடிய அதர்வா.. குருதி ஆட்டம் தாண்டவமா.? தடுமாற்றமா.? விமர்சனம் இதோ…

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவதற்கு சென்ற சூர்யாவுக்கு அதற்கான கதை இன்னும் ரெடியாகவில்லை என்று சூர்யாவிடம் பாலா கூறினாராம். உடனே, அப்செட் ஆன சூர்யா சரி, நீங்க கதையை எழுதி முடிங்க, அதன் பிறகு நான் வந்து நடிக்கிறேன். அதற்குள், நான் சிவா இயக்கத்தில் ஒரு படம் செய்வதாக கூறிவிட்டாராம்.

தற்போது, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்டுகிறது. மேலும், சிவா  இயக்கும் படத்தை முடித்துவிட்டு தான் அடுத்தகட்டமாக பாலாவின் ‘வணங்கான்’ படத்திற்கு செல்லுவார் என தெரிகிறது.

Published by
Manikandan

Recent Posts