இதனால் தான் இந்து பையனை கல்யாணம் செய்தேன்… செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா அதிரடி!

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தன்னுடைய கணவர் ஆரியனை எதற்காக திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து பேசி இருக்கும் தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள சீரியல் மூலம் நடிக்க வந்த ஷபானாவிற்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் தான். அதில், ஹீரோ கார்த்திக் மற்றும் முக்கிய இடத்தில் நடித்த பிரியா ராமன் நடிக்க தன்னுடைய நடிப்பால் இருவருக்கும் சரியான போட்டியாக அமைந்தார் ஷபானா.

ஜீ தமிழில் புகழுக்கு முக்கிய காரணமாக அமைந்தது செம்பருத்தி சீரியல் தான். ஆனால் இந்த சீரியல் சுமுகமான முடிவை எட்டவில்லை. ஹீரோ கார்த்திக் திடீரென சீரியல் இருந்து வெளியேற அதற்கென உள்ளே நுழைந்தவர் அக்னி. இதனால் செம்பருத்தி ரசிகர்கள் அத்தொடரை பார்ப்பதை நிறுத்த ஒரு கட்டத்தில் சீரியலை முடித்துக் கொண்டது டிவி நிர்வாகம்.

ஆனால் ஷபானாவிற்கு சரியான புகழ் கிடைக்க மிஸ்டர் மனைவி சீரியல் மூலம் சன் டிவிக்குள் வந்தார். இவர் நடிகர் ஆரியனை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பினாலும் இரு தரப்பும் அது குறித்து வாய் திறக்கவில்லை. ஏனெனில் முதலில் இவர்கள் இரு குடும்பமும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

முஸ்லீம் பெண்ணான ஷபானா இந்து பையன் ஆர்யனை விரும்பியதை அவர்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், செம்பருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் ஷபானா பொட்டு வைத்து நடிக்க அவர் குடும்பம் இவரிடம் ஒரு மாதமாக பேசவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் அப்போதே ஷபானா இந்து பையனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டாராம்.

இதைத்தொடர்ந்தே ஆரியனுடன் காதலில் விழுந்தவர். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இன்னமும் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஷபானா திருமண வாழ்வில் குறித்து பல கிசுகிசுக்கள் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it