தாய்கிழவி விமர்சனம்: கிடைக்கிற கேப்பில் எஸ்கேவை வாரிவிட்ட ப்ளுசட்டை மாறன்

ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவகுமார் முருகேசன் என்ற புதிய இயக்குனர் இயக்கியத்தில் இன்று வெளியாகிறது தாய்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தின் முதல் ப்ரமோ வெளியானபோதே படம் சூப்பர்ஹிட் ஆகும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே படத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில் தாய்கிழவி படத்தின் விமர்சனத்தை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், கடந்த 10 நாட்களாக பார்த்தால் சோசியல் மீடியாவில் ஒரே கூவலக இருந்தது. தாய் கிழவி படம் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது சூப்பராக இருக்கிறது என்று. கொஞ்சம் உற்று கவனித்தால் இந்தப் படத்தை நம்ம திடீர் தளபதி (சிவகார்த்திகேயன்) வழங்குகிறார் என இருந்தது. அவர் உள்ளே நுழைந்தாலே அதில் ஒரு ஸ்கேம் இருக்கும்.

அவர் நினைத்தால் சோஷியல் இல்லாததை இருக்கும் என்றும் இருப்பதை இல்லாதது மாதிரியும் செய்ய முடியும்.ஏன் என்றால் அவர் சோசிய மீடியாவில் ஒரு டான் ஆகிவிட்டார். உங்களுக்கே தெரியும் எவ்வளவு பெரிய விசயத்தை பூசி மெழுகிருக்காருனு. அப்படி ஏதோ ஒரு ஸ்கேம் செய்து சிக்க வைக்கப்போறாங்களோ என்ற பயம் இருந்தது. அதேபோல் படத்தின் ப்ரோமோஷனை பார்த்தால் ஒரு தண்டட்டி கிழவி கூலிங் கிளாஸ் போட்டு சுருட்டு பிடிக்குது. நாட்டியான பாட்டியாக இருக்குமோ; இதனிடம் சென்று மாட்டிக்கொள்ள வேண்டுமோ என இருந்தது. படம் ஆரம்பித்து முதல் பாதியில் இலக்கு இல்லாமல் போனது. பாட்டி கேரக்டரை கொஞ்ச நேரத்திலேயே படுக்க வைத்துவிட்டார்கள். அது நிம்மதியான இருந்தது.

இரண்டாம் பாதியில் சிறிது நேரம் கழித்து கதையே புரட்டி போடுகிற மாதிரி ஒரு சீன் வந்தது.பெண்ணுரிமை பற்றி பெரியார் சொன்ன விசயத்தை வழ வழவென்று இழுக்காமல் சிறிய காட்சியில் அழகாக சொல்லிருப்பது படத்தின் கதையின் கலரையே மாற்றிவிட்டது. மொத்ததில் இந்த படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.