ஒரே குடும்பத்தில் இருந்து 7 நடிகர்கள்! யாரும் செய்யாத அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

Actor Vijayakumar: தமிழ் சினிமாவில் ஒரு பெருமைமிக்க நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜயகுமார். ஸ்ரீவள்ளி என்ற படத்தில் சிறிய முருகனாக நடித்து தன் முதல் சினிமா அறிமுகத்தை பதிவு செய்தார்.சிறிய முருகன் என்பதால் அந்த நேரத்தில் அவரின் நடிப்பு வெளிப்படவில்லை. அதே போல் கந்தன் கருணை படத்தில் சிவக்குமார் ஏற்று இருந்த முருகன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜயகுமார்தான்.

ஆனால் அந்த வாய்ப்பு ஏதோ ஒரு காரணத்தால் சிவக்குமாருக்கு சென்றது. அதன் பிறகு பொன்னுக்கு தங்க மனசு என்ற படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க விஜயகுமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மதுர கீதம்’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ போன்ற படங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க: 33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க

சினிமா மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் நடித்தார் விஜயகுமார். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கோலிவுட்டில் சிறந்த குணச்சித்திர நடிகர் யார் என்றால் அது இவர்தான்.விஜயகுமாருக்கு மொத்தம் இரு மனைவிகள். முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா. அதில் அருண்விஜய், கவிதா, அனிதா போன்றவர்கள் மூத்த மனைவிக்கு பிறந்த குழந்தைகள்.

arun

arun

வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள். இந்த நிலையில் சினிமா துறையில் ஒரே குடும்பத்தில் இருந்து ஒன்றிரண்டு பேர் சினிமாவில் நடிக்க வந்ததை கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சிவக்குமார் வீட்டில் மொத்தம் நான்கு பேர் சினிமா துறையில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…

அதே போல் விஜயகுமார் வீட்டில் இருந்து மொத்தம் 7 பேர் சினிமாவுக்குள் வந்தவர்கள். விஜயகுமாருடன் சேர்ந்து மஞ்சுளா, அருண்விஜய், ஸ்ரீதேவி, பிரீத்தா, வனிதா, கவிதா என எல்லாருமே சினிமாவில் நடித்தவர்கள். இதில் கடைசியாக ஓ மை டாக் என்ற படத்தின் மூலம் அருண்விஜயின் மகனும் அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஒரே குடும்பத்தில் இருந்து 7 பேர் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் அது விஜயகுமார் வீட்டில் மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story