Connect with us
bablu

Cinema News

ஏதோ நடந்திருக்கு! ஹீத்தலை கூப்பிட்டா வருவா? ஷகீலா கேட்ட கேள்வியால் திக்குமுக்காடிய பப்லு

Actor Prithviraj: சினிமா வட்டாரத்தில் பெரும் வயித்தெறிச்சலை ஏற்படுத்திய ஜோடி என்றால் ஒன்று சின்னத்திரை நடிகரி மஹாலட்சுமி – ரவீந்தர் ஜோடி. மற்றொன்று பிரித்விராஜ் – ஷீத்தல் ஜோடி. இவர்கள் இருவரையும் பார்த்து காண்டாகாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

50 வயதை கடந்தும் தனக்கு 25 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக பப்லு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பப்லுவுக்கு திருமணமாகி 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஐந்து ஸ்டாருக்காக இந்தளவுக்கு கேவலமாக பேச முடியுமா? விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய்

ஆனால் அவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் மன நிலை சரியில்லாமல் இருக்கிறார். எல்லாமே என் மகன், என் மகன் தான் உலகம் என்று இன்றளவும் வாழ்ந்து வருபவர் நடிகர் பிரித்விராஜ். தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்த வந்த பப்லு ஜிம்மில் வரும் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவருடன் லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் இருந்து வந்தார்.

அவர்தான் ஷீத்தல். இருவரும் சேர்ந்து இருக்கிற புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கடுப்பாக்கினார் பிரித்விராஜ். இருவருக்கும் திருமணமாகிவிட்டதா என கேட்கும் போது இல்லை நாங்கள் இருவரும் லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: அஜித்தின் ஆசைக்கு குறுக்கே வந்த சூர்யா!.. தள்ளிப்போன அந்த படம்!. இப்ப எல்லாமே மாறிப்போச்சே!..

அதுமட்டுமில்லாமல் ஷீத்தலை கப் கேக் என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன் என கூறி மேலும் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கினார். இந்தளவுக்கு இருந்த இவர்கள் இன்று பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின்றது.

இதைப் பற்றி சமீபகாலமாக பிரித்விராஜும் பல பேட்டிகளில் பேசி வருகிறார். ஆனால் என்ன நடந்தது என்பதை பற்றி குறிப்பிடவில்லை. மேலும் இனிமேல் என் பர்ஷனலை பற்றி பேசவும் தயாராக வில்லை என்றும் கூறிவிட்டார். இந்த நிலையில் ஷகீலா சமீபத்தில் பிரித்விராஜை பேட்டி எடுத்தார்.

இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்க இருந்த ரியல் ஸ்டோரி.. அட்லீ வசனம் எழுத நான் நடித்திருக்க வேண்டும்.. ஹீரோ சொன்ன சர்ப்ரைஸ்..!

அப்போது முன்னதாகவே ஷகீலா பப்லுவிடம்  ‘என்னிடம் சொல்லிவிட்டார்கள். அவரே எதாவது ஓப்பனாக சொன்னால் கேளுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்’ என சொன்னதாக கூறினார். மேலும்  ‘ஷீத்தலை பேட்டி எடுக்கலாமா? கூப்பிட்டா வருவா? நீ எனக்கு தெரிந்தவர் என்பதால் உன்னிடம் கேட்டு அதன் பிறகு பேட்டிக்கு அழைக்கலாம் என இருக்கிறேன்’ என ஷகீலா கேட்டார். அதற்கு பிரித்விராஜ் அவளும் இதைத்தான் சொல்லப் போகிறாள். இது உங்களுடைய வேலை என்று சொல்லிவிடுவாள் என்று பப்லு கூறினார்.

ஷீத்தல் நம்பரை வாங்க பல பேர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர் நம்பர் கிடைக்கவில்லை என ஷகீலா கூறீனார். இதைப் பற்றி மேலும் பப்லு கூறும் போது இதை அப்படியே விட்டுவிடலாமே? மேலும் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என ஷகீலாவிடம் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top