வேலியில போற ஓணான இழுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையால இருக்கு… சும்மா இருந்த நெக்சனை வம்புக்கு இழுத்த பிரதீப்!...

by amutha raja |
biggboss nexen and pradeep
X

பிரபல தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 16 போட்டியாளர்களே உள்ளனர். இதன் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார். பின் அவரை தொடர்ந்து பவா செல்லத்துரை தன்னால் இங்கு போட்டி போட முடியாது என அவரே தானாக வெளியேறினார்.

பின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு அவர்கள் தன்னை ஒரு நல்ல போட்டியாளர் என நிரூபிக்க வேண்டும் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரும் அவர்களில் பக்கத்தில் இருந்த நல்ல விஷயங்களை கூறி தங்களை நிரூபித்தனர். பின் நெக்சன் தனது திறமையான ஆடல் பாடம் போன்றவற்றை கூறி தன்னை ஒரு சிறந்த போட்டுயாளராக காட்டினார்.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!

ஆனால் அப்போது பிரதீப் அப்போ எங்கு ஆடு பார்க்கலாம், பாடு பார்க்கலாம் என அவரை கிண்டல் செய்தார். பின் உனக்கு அப்படைப்பட்ட தகுதியே கிடையாது. கீழே உட்காரு என கூறியுள்ளார். இதனால் கடுப்பான நெக்சன் பிரதீப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எனக்கு தகுதி இல்லை என சொல்ல உனக்கு தகுதி கிடையாது. நான் உன்ன மாதிரி போலியாய் நடித்து கொண்டு ஏற்கனவே ஸ்டேடர்ஜியை வைத்து கொண்டு இந்த போட்டிக்குள் வரவில்லை. நான் எனது சொந்த திறமையினாலும் மேலும் எனது திறமையை அனைவருக்கும் காட்டவே இங்கு வந்துள்ளேன். உனக்கு அப்படிபட்ட திறமை இல்லைனா நீ மூடிட்டு உட்காரு என பிரதீப்பிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் வாசிங்க:அங்க அவ்ளோ டிரெஸ் இருக்கு!.. அதவிட்டு இப்படி பத்தாத பனியனை போட்டு நிக்கிறியே ஷிவானி!..

அவரவர் அவரவர் தனி திறமையை பேசும் போது பிரதீப் இவ்வாறு பேசியது போட்டியாளர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சும்ம போற ஓணான இழுத்து வேட்டில விட்ட கதையா ஆகிபோச்சு பிரதீப் நிலைமை. இதுக்கு இந்த வாரம் ஆண்டவர் என்ன சொல்ல போறாருனு பார்க்கலாம்

Next Story