அஜித்கிட்ட பிடிச்ச விஷயம்! பல பேட்டிகளில் மறைக்காமல் விஜய் சொன்ன நச் பதில் - சரியாத்தான் சொல்லிருக்காரு

Vijay vs Ajith: தமிழ் சினிமாவில் நீயா நானா போட்டி ஆரம்பகாலங்களில் இருந்தே நடிகர்களிடம் இருந்து வருகிறது. அது எம்ஜிஆர் சிவாஜி ஆகட்டும். ரஜினி கமல் ஆகட்டும், இன்றுவரை விஜய் அஜித் வரைக்கும் இந்த போட்டி தொடர்ந்து கொண்டே வருகின்றது.

அதுவும் விஜய் அஜித் ரசிகர்கள்தான் இந்தப் போட்டியை மிகவும் பலப்படுத்தியிருக்கிறார்கள்.ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான நட்பு இருந்து வந்தது. அஜித் விஜய் வீட்டிற்கு செல்வதும் விஜய் அஜித் வீட்டிற்கு செல்வதும் உயிர் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் லைக்காவுடன் இணைய காரணமாக இருந்தவர் இவர்தானாம்! ரகசியமாக நடந்த மீட்டிங்

இதை விஜயின் அம்மா ஷோபாவே கூறியிருக்கிறார்.இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படம் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமும் கடைசி படமுமாக அமைந்தது.

அதன் பின் இருவரும் அவரவர் வழியை பார்த்துக் கொண்டு தங்களுக்கென்று தனி ஒரு மார்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் சமமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.இவர்களின் படங்கள் எத்தனையோ முறை மோதினாலும் கடந்தாண்டு ரிலீஸான வாரிசு மற்றும் துணிவு படங்களின் போட்டிதான் பலமாக இருந்தது.

இதையும் படிங்க: ‘வெளியே போ’ என விரட்டிய நடிகர்!. குமுறி குமுறி அழுத இயக்குனர் லிங்குசாமி!…

இதே ஒரு போட்டி அடுத்து விடாமுயற்சிக்கும் தளபதி68க்கும் இடையே உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜயின் ஒரு பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அஜித்திடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் நீண்ட நேரம் யோசித்து அஜித்திடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்னவென்றால் அவருடைய தன்னம்பிக்கை என்று பதில் கூறியிருக்கிறார். ஒரு பேட்டி மட்டும் இல்லை. அவர் அளித்த பல பேட்டிகளில் இதே கேள்வி கேட்க அதற்கு தன்னம்பிக்கை என்று தான் விஜய் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி

 

Related Articles

Next Story