Connect with us

latest news

பாக்கியலட்சுமி: புருஷனுக்கு மட்டுமா? புள்ளைகளுக்கும் ரெண்டு தான் போலயே…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷை பார்க்க அவர் அப்பாவும் அம்மாவும் வருகின்றனர். யாரை கேட்டு என் பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. எத்தனை பொய் உங்கள நம்பி நான் வரவே மாட்டேன். எனக்கு என் அமிர்தாவும், பொண்ணும் வேணும் என்கிறார்.

இனி எதையுமே மாத்த முடியாது கணேஷ். வீட்டுக்கு போலாம் என கெஞ்சுகின்றனர். ஆனால் விடாப்பிடியாக முதல் புருஷன் நான் இருக்கும் போது எப்படி இரண்டாவது கல்யாணம் செய்யலாம். அது சட்டப்படி செல்லாது. அவங்க கூடத்தான் வருவேன். இனி என் மூஞ்சிலையே முழிக்காதீங்க. நானும் அமிர்தாவும் சந்தோஷமா வாழுவோம் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: ஆசையா கேட்ட சிவாஜி.. அதிர்ச்சியான ரஜினி.. ஆனா செஞ்சாரு பாருங்க அதான் சூப்பர்ஸ்டார்!..

இதை தொடர்ந்து வீட்டில் பாக்கியா, அமிர்தா, ஜெனி, செழியன் என நால்வரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் மாலினியை பார்த்து செழியன் ஷாக் ஆகிறார். இதை பார்த்த பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. ஆனால் ஜெனி சாதாரணமாக எடுத்து கொள்கிறார்.

ப்ராஜெக்ட் விஷயமாக வந்ததாக சொல்கிறார். உடனே ஜெனி அப்போ நீங்க வொர்க் பாருங்க நான் ரூமுக்கு செல்கிறேன் என எழுந்து சென்று விடுகிறார். அப்போ மாலினியை கடுப்புடன் பார்க்கிறார் செழியன். நீ வரல அதான் நான் வந்தேன் என கிசுகிசுக்கிறார். அப்போ பாக்கியாவிடம் இந்த இடம் சத்தமா இருக்கே எனக் கேட்கிறார் மாலினி.

செழியா அப்போ நீயும், அவங்களும் பாட்டி ரூமுக்கு போய் வேலை பாருங்க என அனுப்பி வைக்கிறார். மாலினியும் கிளம்பு கிளம்பு போலாம் என அவசரப்படுத்துகிறார். ரூமுக்கு சென்றதும் மாலினி, செழியனிடம் நீ வரலைனு சொல்லிட்ட ஆனா எனக்கு தோணும் போதெல்லாம் உன்னை பார்க்க வந்துக்கிட்டே இருப்பேன் என்கிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: மீனா வாழ்க்கைக்கு சூனியம் வச்சிட்டியேமா.. கல்யாணத்துக்கு ஆள் பார்த்த ரவி..!

அந்த நேரத்தில் காபி எடுத்து வரும் பாக்கியாவிற்கு மாலினி மீது மேலும் சந்தேகம் வருகிறது. வெளியில் வந்து அமிர்தாவிடம் இப்டி க்ளையண்ட் வீட்டுக்கு வந்தா வேலை வாங்குவாங்க என சந்தேகம் கேட்கிறார். அவங்களுக்கு வேலையில் என்ன அவசரமோ என்கிறார் அமிர்தா.

அந்த நேரத்தில் கணேஷின் அப்பாவும், அம்மாவும் பாக்கியாவிற்கு கால் செய்து தனியாக பார்க்க வேண்டும் எனக் கூறி அருகில் இருக்கும் பார்க்கிற்கு வர சொல்கிறார்கள். அங்கு வரும் பாக்கியாவிடம் தங்கள் மகன் கணேஷ் உயிருடன் வந்து விட்டதையும் அவர் அடம் பிடிப்பதையும் கூறி விடுகின்றனர். இதை கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top