Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: விஜயாவால் கடுப்பான வித்யா… திருமண விஷயத்தில் அவசரம் காட்டும் ஸ்ருதி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வாங்க என கூப்பிடும் மீனாவிடம் சமாளித்து ஊருக்கு கிளம்பி விடுகிறார் ரோகிணி அம்மா. அவரிடம் தன்னுடைய போன் நம்பரை எழுதி கொடுத்து அனுப்புகிறார் மீனா. ஒருவழியாக நிம்மதியாகிறார் ரோகிணி.

ரூமுக்குள் வரும் ரோகிணி இந்த மீனா என்ன அன்னை தெரசாவா ஏன் இப்டி ஓவரா பண்ணுறா எனக் கோபப்படுகிறார். அதற்கு வித்யாவும் ஆமா அவளால தான் உனக்கு பிரச்னை வரும் என நினைப்பதாக கூறுகிறார். இதுக்கு தான் சொன்னேன் நீ மனோஜை கூப்பிட்டுக்கிட்டு தனிக்குடித்தனம் போயிடு என அட்வைஸ் செய்கிறார்.

இதையும் படிங்க: நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..

அந்த நேரத்தில் ரூமுக்குள் வரும் விஜயா வா மா வித்யா எனக்கு பார்வதி மாதிரி தான் நீனும் ரோகிணிக்கு. இருங்க உங்களுக்கு ஜூஸ் போட்டு கொண்டு வரேன் எனக் கூறி செல்கிறார். உன் மாமியாருக்கு கொழுப்பு டி, என்ன பாத்தா அந்த பார்வதி அம்மா மாதிரி குண்டா இருக்கனா எனக் கூறி காண்டாகிறார். இவங்களுக்காக தான் என்னால வீட்டை விட்டு போக முடியல என ரோகிணி கூறுகிறார்.

ரெஸ்டாரெண்ட் மூடும் நேரம் வரும் போது ரவி ஸ்ருதியை கிளம்பு வீட்டுக்கு இனி இருக்க முடியாது எனக் கூறுகிறார். ஆனால் ஸ்ருதி அப்போ கல்யாணத்துக்கு ஒரு முடிவு சொல்லு என நச்சரிக்கிறார். உனக்கு ஒரு நாளைக்கு தான் டைம் அப்புறம் நான் எடுக்குற முடிவ நினைச்சு நீ வருத்தப்படுவ என எச்சரித்து விட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!

வீட்டில் தூங்காமல் முழித்து கொண்டு என்ன செய்யலாம் என ரவி யோசித்து கொண்டே நடக்கிறார். அதே வேளையில் ஸ்ருதியும் தொடர்ச்சியாக கால் செய்து கொண்டும் ஆடியோ மெசேஜ் செய்தும் நச்சரித்து கொண்டு இருக்கிறார். காலையில் தான் செல்லும் இடத்தினை அனுப்பிவிட்டு மீண்டும் வார்னிங் செய்து விட்டு கிளம்புகிறார்.

காலையில் ஸ்ருதி வீட்டுக்கு வரும் பிஜூ ஸ்ருதியின் அப்பா மற்றும் அம்மாவுக்கு கிப்ட் கொடுத்து ஸ்ருதியை ஷாப்பிங் அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் கடையில் ரவியும் வந்து லிப்ட்டில் ஏறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top