Connect with us

Cinema News

வாடிவாசல் ட்ராப்புனு யாரும் சொல்லாதீங்க… சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்தான்!..

சூர்யா நடிப்பில் உருவாக இருப்பதாக கூறப்பட்ட வாடிவாசல் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி இருந்தது. ஆனால் அப்படத்தின் முதற்கட்ட வேலைகளை தவிர மற்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மொத்தமாக மும்பையில் செட்டில் ஆனார். இதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட் படத்தில் தான் அதிக கவனம் செலுத்துவார் என பலராலும் பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ப நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக கோலிவுட் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: வா வா டியரு பிரதரு… கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!

பாலிவுட் படத்தில் நடித்துவரும் சூர்யாவின் அடுத்த தமிழ் படமாக கங்குவா அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் முறையாக இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த வாடிவாசல் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் வெற்றிமாறனும் விடுதலை படத்தில் பிஸியாக இருந்தார். இதனால் இப்படம் கைவிடப்படும். சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு நடிகர் இப்படத்திற்குள் நுழையலாம் எனவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியானது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,ஜூலை 5ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நான், இயக்குனர் வெற்றிமாறன், தம்பி சூர்யா மூவரும் இணைந்து படத்தை எவ்வாறு எப்படி எடுக்க போகிறோம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

வரும் அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் எனவும் படக்குழு தீர்மானத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கங்குவா திரைப்படத்தை முடித்த சூர்யாஅடுத்து வாடிவாசலில் இணைவது ஏறக்குறைய முடிவாகி இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top