More
Categories: Cinema News latest news

இனிமே என் காட்டுல மழை தான்… ஓவர் பில்டப் கொடுக்கும் வடிவேலு! இதே உருட்டதான முன்னவும் போட்டீங்க!

காமெடி என்றால் வடிவேலு என்ற நிலை தற்போது பெரும்பாலும் இல்லை. பல நாட்கள் இடைவேளை விட்டு நாய் சேகரில் ரிட்டர்ன் கொடுத்தாலும் அவருக்கு குணசித்தர வேடமான மாமன்னன் தான் பெயர் வாங்கி கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் தன் கதாபாத்திரம் நின்னுபேசும் என தொடர்ச்சியாக வடிவேலு கூறி வருகிறார்.

பி.வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2. ரசிகர்களிடம் இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை என்பதே உண்மை. ரஜினிகாந்த் மாதிரி ஒரு பெரிய ஸ்டார் நடித்த கதாபாத்திரத்தினை யாராலும் ரிப்ளேஸ் பண்ண முடியாது. இது ஒரு நல்ல படத்தினை சிதைக்கும் வேளையாக பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க :  இதனாலதான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்கறது இல்ல!… இப்படிதான் தேர்வுகள் நடக்குமாம்!..

ஜோதிகா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு மீண்டும் காமெடி ரூட் பிடித்து இருக்கிறார். இப்படத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும் என பலரும் பேட்டிகளில் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். கீரவாணி கூட சமீபத்திய பேட்டியில் வடிவேலு காமெடி குறித்து பேசி இருக்கிறார்.

இதற்கு முன்னர் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க ரஜினிகாந்த் தான் பரிந்துரை செய்திருக்கிறார். அவர் சொன்ன மாதிரியே படத்தில் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் பெயிண்டர் கோபாலு கதாபாத்திரம் ஆளே இல்லாமல்  ஹிட் கொடுத்தது.

இதையும் படிங்க : ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

இந்நிலையில் சந்திரமுகி 2ல் வடிவேலுவின் கதாபாத்திரமும் பெரியதாக இருக்கும் என்கிறார்கள். என் மீது பொறாமை கொண்டவர்கள் இந்த படம் வெளிவந்த பின்னர் மேலும் வயித்தெறிச்சலாக இருக்கும் எனக் கூறினார் வடிவேலு. 

இதே பில்டப்பை தான் நாய் சேகர் படத்திலும் வடிவேலு கொடுத்தார். ஆனால் அவருக்கு அப்படம் பெரிய வரவேற்பை தரவில்லை. மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதே போல் தற்போது வடிவேலு விட்டிருக்கும் டயலாக்கும் காத்தோடு போகுமா? வெல்லுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Akhilan

Recent Posts