உதயநிதி வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் வடிவேலு.! காரணம் இதுதானா.?!
![உதயநிதி வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் வடிவேலு.! காரணம் இதுதானா.?! உதயநிதி வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் வடிவேலு.! காரணம் இதுதானா.?!](https://cinereporters.com/wp-content/uploads/2022/02/udhayanidhi-stalin-vadivelu.png)
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத காமெடியன்களில் முக்கியமானவர் வடிவேலு. அவர் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை, அதிகமாக படங்கள் செய்யவில்லை என்றாலும் அவர் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறார்.
அவர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி தற்போது ஹீரோவாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படியுங்களேன் - 150 கோடியை தூக்கி எறிந்த நெட்ப்ளிக்ஸ்.! கடுப்பான ‘பாகுபலி’ படக்குழு.!
அண்மையில், வடிவேலு உதயநிதி வீட்டிற்கே நேரடியாக சென்றுவிட்டாராம். அங்கு வந்த வடிவேலு, மாரி செல்வராஜ் படத்திற்கு எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என கேளுங்கள். உங்கள் படத்திற்கு கொடுத்து மீதி மற்ற படங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
வடிவேலு 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அதற்காக தீவிர பிரச்சாரம் செய்தார். அதன் காரணமாகவோ என்னமோ கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் திரைத்துறையில் வடிவேலு இயங்க வில்லை.
தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் மீண்டும் திரை துறையில் இயங்க ஆரம்பித்துள்ளார் வடிவேலு. அந்த நன்றிக்கடனுக்காக தான் வடிவேலு இப்படி வீடு தேடி சென்று கால்ஷீட் கொடுத்துள்ளார் என கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.