Connect with us
ethirneechal

latest news

எதிர்நீச்சல் சீரியல்: இனி வேற லெவல் ஆட்டம்தான்… திரும்ப களமிறங்கிய ஆதி குணசேகரன்…

சன் டிவியில் டி.ஆர்.பியில் முன்னணியில் திகழ்வது எதிர்நீச்சல். பெண்கள் வாழ்வில் படும் கஷ்டங்கள் அவர்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற சூல்நிலையை மையமாக கொண்ட கதைதான் இந்த சீரியல். இந்த சீரியலை சன் டிவியில் வெற்றி பெற்ற கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார்.

இந்த சீரியல் மக்களிடையே பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கனிகா, மதுமிதா, ஹரிபிரியா போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். விருவிருப்பாக சென்ற இந்த சீரியலில் திடீரென ஒரு சோகமும் அரங்கேறியது.

இதையும் வாசிங்க:நடிகனாக இருப்பதை விட அதுதான் பெரிய சந்தோஷம்! ரஜினி சொன்ன சீக்ரெட்

இந்த சீரியலில் ஆதி குணசேகராக நடித்த இயக்குனர் மாரிமுத்து சமீபத்தில் இறந்து விட்டார். இது அந்த சீரியலில் நடிப்பவர்களை மீளாதுயரில் ஆழ்த்தியது. பின் அந்த கதாபாத்திரத்தை நமக்கு காட்டாமலே நாடகத்தினை மற்றவர்களை நோக்கி நகர்த்தி கொண்டு சென்றார் இயக்குனர் திருசெல்வம்.

கதைப்படி ஆதிகுணசேகரன் தனது சொத்துகளை தம்பிகளின் பெயரில் எழுதிவைத்துவிட்டு எங்கோ சென்றபடி காட்டினர். தம்பிகள் அனைவரும் அவரை தேடி அழையும் போது சாமியார் ஒருவர் அவர் இரண்டு நாட்களில் வருவார் என கூறுகிறார்.

இதையும் வாசிங்க:பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வீட்டுக்கு உள்ளே சென்ற 18 போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா?.. இதோ லிஸ்ட்!..

அதன்படி இன்று வந்த ப்ரோமோவில் தம்பிகள் அனைவரும் அண்ணன் வரும் சந்தோஷத்திலும் திமிரிலும் வருகின்றனர். அப்போது நந்தினி பேச்சு மட்டும்தான் இருக்கு.. ஆக்‌ஷனை காணும் என கூறுகின்றாள். கதிரோ வந்துட்டார்ல எங்க அண்ணன்…வாங்க அண்ணன் என கூறுகிறார். ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி காரில் இருந்து இறங்குகிறார். இவ்வாறாக நாளைய எபிசோட் ப்ரோமோ இருந்தது.

ஆக மொத்தம் ஆதி குணசேகரனாக வேலராம மூர்த்திதான் வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. சினிமாவிலேயே வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடிக்கும் வேல ராமமூர்த்தி இனி எதிர்நீச்சலின் எவ்வாறு அனைவரையும் நடுங்க வைப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:உதவி செய்த எம்.ஜிஆரை தட்டி உதறிய வி.எஸ்.ராகவன்… ஆனாலும் மனுஷனுக்கு இம்புட்டு ஆகாதுப்பா!…

google news
Continue Reading

More in latest news

To Top