Connect with us
vijay

Cinema News

உச்சக்கட்ட கோபத்தில் விஜய்.. இனி இந்த தப்பு நடக்கவே கூடாது.. அவசர கூட்டத்திற்கு இதுதான் காரணமா?..

நடிகர் விஜய் வரும் சனிக்கிழமை அன்று ரசிகர்களையும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் இருக்கும் விஜயின் அலுவலகத்தில் தான இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதறக்கா அவர் ஒரு 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியருக்க போவதாகவும் தகவல் வெளியானது. லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய், அதற்கடுத்து எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார்.

இதையும் படிங்க- இனிமே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு இடமே இல்ல – போட்டியை டிராவில் முடித்த ரஜினி!

மேலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவ மாணவிகளை சந்தித்து, பரிசு வழங்கினார். இவரின் நடவடிக்கைகளை பார்த்து, இவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் நிக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும் விஜய்யும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளோடு, அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இயக்கத்தை கட்சியாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலயில், வரும் சனிக்கிழமை அன்று விஜய் ரசிகர்களை சந்திக்கப்போகிறார். இந்த சந்திப்பின் போது, விஜய் நிர்வாகிகளையும், ரசிகர்களையும் கண்டிக்கப்போகிறார்.

அவர்கள் மீது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கும் இந்த சமயத்தில், அவரின் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அடிக்கடி மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் வம்பிழுத்து, பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதனால், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜய் மீது கடுப்பாக வாய்ப்புள்ளது. அது இந்த நேரத்தில், தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், விஜய் கோபத்தில் இருக்கிறார் என்றும், சனிக்கிழமை அன்று இந்த பிரச்சனைக்க ஒரு முடிவு கட்ட போகிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க- சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… லியோ படத்துக்கு பெரிய ஆப்பாய் வைத்த சென்சார்!

google news
Continue Reading

More in Cinema News

To Top