Connect with us
vijay

Cinema News

விஜயை கைது செய்யனும்! ரசிகர்களை ஏவிவிட்டு என்ன செஞ்சாரு தெரியுமா?.. பெண்மணி புகார்

கடந்த மாதம் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே பாடல் மீதான பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்தப் பாடல் முழுவதும் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார்.

ஏற்கனவே இனிமேல் நான் எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்த நிலையில் இந்தப் படத்தில் அவர் அப்படி தோன்றியிருந்த காட்சி அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கடந்த சில வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் ராஜேஸ்வரி பிரியா என்பவரும் அந்தப் படத்தின் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.

vijay1

vijay1

இதையும் படிங்க :ஒரே நேரத்தில் காதலி, மனைவி, தங்கை, அம்மாவா? யாருப்பா அந்த நடிகர்? சொல்லமுடியாத கொடுமை

அது மட்டும் இல்லாமல் ராஜேஸ்வரி பிரியா கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றி படுமோசமாக பேட்டிகளில் பேசிக்கொண்டு வருகிறார். விஜய்க்கு அறிவு இல்லையா என்றும் இந்த ஒரு சமூக அக்கறை கூட இல்லாத இவர் எப்படி அரசியலில் ஜொலிக்க முடியும் என்றும் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இன்று டிஜிபி அலுவலகத்திற்கு வந்து விஜய் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறாராம். அந்த புகாரில் விஜயை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு என்ன காரணம் என்பதையும் கூறி இருக்கிறார். அதாவது கடந்த சில நாட்களாக விஜய் பற்றி கூறிவரும் ராஜேஸ்வரி பிரியாவை விஜயின் ரசிகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒரு சில பேர் ஆபாசமான முறையில் ராஜேஸ்வரி பிரியாவை பேசி வருவதாகவும் மிரட்டுவதாகவும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க :அப்போ தேவைப்படல! இப்போ மட்டும் தேவைப்படுதா? பயில்வானின் கேள்வியால் பயங்கர அப்செட்டில் ஹன்சிகா

vijay3

vijay3

அதோடு சமூக வலைதளங்களில் தன்னைக் குறித்து விஜய் ரசிகர்கள் இழிவாக பேசி வருகின்றனர் என்றும் இதை விஜய் தான் அவர்கள் ரசிகர்களுக்கு பணம் கொடுத்து இந்த மாதிரி செய்ய சொல்லி இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். ஏனெனில் இணையத்தில் என்னை இழிவாக பேசும் அத்தனை ரசிகர்களும் விஜயின் இணையதள பக்கத்தை டேக் செய்தே தான் அனுப்பி வருகின்றனர்.

இதை விஜய் பார்க்காமலா இருப்பார் .ஒருவேளை இது தவறு என நினைத்திருந்தால் அவரது ரசிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோளாவது விடுத்திருக்கலாமே. செய்யலையே. அதனால் விஜயை கைது செய்ய வேண்டும் என ராஜேஸ்வரி பிரியா அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top