என்னய்யா நடக்குது? இங்க அடிச்சிட்டு இருக்காங்க - ரஜினி ரசிகனா விஜய் செய்த காரியத்தை பாருங்க

Rajini - Vijay: தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 வருட திரைப்பயணத்தில் ஏராளமான வெற்றி தோல்விகளை பார்த்து வந்த ரஜினி சமீபகாலமாக ஒரு மாஸ் நடிகராகவும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற வசனத்திற்கு உண்மையான சொந்தக்காரராகவே இருந்து வருகிறார் ரஜினி. எத்தனையோ நடிகர்களின் படங்களோடு ரஜினியின் படங்கள் மோதி வெற்றியும் கண்டிருக்கின்றன. தோல்வியும் பார்த்திருக்கின்றன.

இதையும் படிங்க: இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!.. கண்டுகொள்ளாத சினிமா உலகம்!..

ஆனால் சமீபகாலமாக நடிகர் விஜயுடனான போட்டி இழுத்துக் கொண்டே போகின்றது. ரசிகர்கள் ஆரம்பித்து வைத்த வினைதான் இந்த பனிப்போருக்கான காரணம். வெளியில் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறைதான்.

இணையத்தில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத ரஜினியும் விஜயும் உள்ளுக்குள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பிரபல சினிமாட்டோகிராஃபர் மனோஜ் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..

மனோஜ் லியோ, நடுனிசி நாய்கள் போன்ற படத்திற்காக ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். லியோ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போதே ரஜினி 171 படத்தை லோகேஷ்தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ரஜினி 171 படத்தின் கதையை விஜயும் கேட்டதாக லோகேஷ் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர் மனோஜிடமும் விஜய் ‘தலைவர் படத்திற்கும் நீதான் பண்ற. எங்கேயும் போயிராத. ரஜினி 171 படம் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் படமா இருக்க போகுது. அதுமட்டுமில்லாமல் நிறைய VFX சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் இருக்கு. நீ இத கண்டிப்பா பண்ணியே ஆகனும்’ என்று ஒரு ரசிகனாக விஜய் மனோஜிடம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: சிக்கலில் தவித்த பி.வாசு குடும்பம்… தக்க சமயத்தில் உதவிய எம்ஜிஆர்… எப்படினு தெரியுமா?…

இந்த தகவலை பகிர்ந்து மேலும் கூறிய மனோஜ் நாம் எல்லாரும் ரஜினி மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறமோ அதை விட அதிகமாக விஜய் ரஜினி மீது அளவுக்கதிகமாக மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார். இது தெரியாமல் வெளியில் கண்டபடி எழுதிக்கிட்டு இருக்கிறார்கள் என மனோஜ் கூறினார்.

 

Related Articles

Next Story