சும்மா இருந்தவங்கள உசுப்பேத்தி ரசிக்கும் விஜய்! உண்மையிலேயே இப்படிப்பட்டவரா? பாடிகார்ட் சொன்ன உண்மை!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக இருப்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். ரஜினி, கமல் இவர்களுக்கே இல்லாத ஒரு க்ரேஸ் விஜயிடம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் இருந்து வருகிறார். ரசிகர்களுக்கு விஜயின் படங்கள் தான் பெரிய விருந்தாக அமைந்து வருகின்றன.

எப்பொழுது விஜய் படம் ரிலீஸ் ஆனாலும் அதை ஒரு திருவிழா போலத்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேளம், பாலாபிஷேகம், ஆளுயர கட் அவுட் என திரையரங்குகளை அமர்க்களப்படுத்தி விடுகின்றனர். அதே நேரம் விஜயும் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து அவருடைய அன்பையும் கொடுத்துவருகிறார். சென்னையில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் ரசிகர்களை சந்திப்பதற்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.

இதையும் படிங்க: இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..

கேரவன் மேல் நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை விஜய் செய்வதன் மூலம் இன்னும் ரசிகர்களுக்கிடையே விஜய் மீதான செல்வாக்கு அதிகமாகவே இருக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக விஜய் அடுத்து அரசியலுக்கும் செல்கிறார். அதிகளவு மக்கள் செல்வாக்கு கொண்ட விஜய் இதை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைகிறார். ஆனால் அரசியலில் விஜயின் பாட்ஷா பழிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்ஜிஆர், விஜயகாந்த் வழியை அப்படியே பின்பற்றித்தான் விஜயும் அரசியலுக்குள் கால் வைக்கிறார். இந்த நிலையில் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுக்கு பாடிகார்டாக ஒரு நான்கு பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் விஜயின் உண்மையான முகம் என்ன என்பதை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

அதாவது விஜயின் பெயரை குறிப்பிட்டு சொல்லாமல் பெரிய நடிகர் என்றே அந்த பாடி கார்டு சொல்லியிருக்கிறார். ஒரு பெரிய நடிகர் ஒருவர் கேரவனில் இருந்து ரசிகர்களை சந்திக்க வெளியே வருகிறார். அங்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டம். இடையில் வேலி அமைத்திருக்கிறார்கள். அந்த நடிகர் கையசைத்த படியே ரசிகர்களை நெருங்குகிறார். அந்த சமயம் அந்த வேலி இடிந்து விழுகிறது.

உடனே நாங்கள் விஜயை அழைத்துக் கொண்டு கேரவனுக்கு சென்று விட்டோம். வேலி இடிந்ததனால் ரசிகர்கள் ஓடி கேரவனை நோக்கி வருகிறார்கள். உள்ளே இருக்கும் அந்த நடிகர் என்னிடம் ‘யாரையும் உள்ளே விடாத. பாத்தீயா நம்ம கெத்தஎன்று சொல்லி சிரிக்கிறார் ’ என அந்த பாடி கார்டு கூறினார். இவர் சொன்ன அந்த நடிகர் விஜய்தான் என கமெண்ட்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இது சம்பந்தமான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது.

இதையும் படிங்க: கால் முளைத்த மாம்பழமாக நடந்து செல்லும் லாஸ்லியா!.. குழந்தை டிரெஸ் போட்டுக்கிட்டு ஊஞ்சல் ஆடுறாரே!..

 

Related Articles

Next Story